2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் |
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அல்லு அர்ஜூன், ராஷ்மிகா நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் தெலுங்கில் வெளியான புஷ்பா படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. வெற்றி பெற்றதுடன் அல்லாமல் நாயகன் அல்லு அர்ஜுனுக்கும் கதாநாயகியாக நடித்த ராஷ்மிகாவிற்கும் ஒரே பாடலுக்கு ஆடிய சமந்தாவுக்கும் கூட ரசிகர்களிடம் இன்னும் மிகப்பெரிய அளவில் அங்கீகாரங்களை பெற்றுத் தந்துள்ளது. குறிப்பாக கடந்துசென்ற விநாயகர் சதுர்த்தி பண்டிகையில் புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுன் நடித்த கதாபாத்திர தோற்றத்தில் விதவிதமான பிள்ளையார் சிலைகள் உருவாக்கப்பட்டு மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்தன. பொதுமக்களால் அதிக அளவிலும் வாங்கி செல்லப்பட்டன.
தற்போது நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு வட மாநிலங்களில் கொண்டாட்டமும் கோலாகலமும் துவங்கியுள்ளன. ஏற்கனவே ராஷ்மிகா மந்தனா ஆடிய சாமி சாமி பாடல் பள்ளிக்கூடங்களில், கலை நிகழ்ச்சிகளில், என குழந்தைகள், இளம்பெண்கள் என பலராலும் விரும்பி ஆடப்பட்டு அந்த வீடியோக்கள் சோசியல் மீடியாவில் அவ்வப்போது வெளியாகி வைரலாகி வருகின்றன.
இந்த நிலையில் குஜராத்தின் ஒரு கிராமம் ஒன்றில் நவராத்திரி கொண்டாட்டத்தின் போது சாமி சாமி பாடலை ஒலிக்கவிட்டு கிராமத்து பெண்கள் வட்டமாக நின்று கோலாட்டம் அடித்து ஆடும் வீடியோ ஒன்றும் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இது ஒரு பக்கம் என்றால் டீனேஜ் இளைஞர்களும் சாமி சாமி பாடலுக்கு நடனமாடும் வீடியோக்களும் வெளியாகி ஆச்சரியத்தை இருமடங்காக்கி வருகின்றன.