புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி |
கடந்த 2020ம் ஆண்டு பழம்பெரும் பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தபோது பாலிவுட் குணசித்ர நடிகர் கமல் ரஷீத் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில் "ரிஷி கபூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் இறந்துவிடக் கூடாது. ஒயின் ஷாப்கள் விரைவில் திறக்கப்படவிருக்கின்றன" என்று குறிப்பிட்டிருந்தார். ரிஷிகபூர் குடிப்பழக்கம் உள்ளவர் என்பதை கிண்டல் செய்வதுபோல அந்த பதிவு இருந்தது. அதேபோல் இர்ஃபான் கான் பற்றியும் அவர் சர்ச்சைக் கருத்துகளைப் பதிவிட்டிருந்தார். இருவருமே அடுத்தடுத்து மரணம் அடைந்தார்கள்.
இரு கலைஞர்களையும் அவர்களின் மறைவை ஒட்டி தரக்குறைவாக விமர்சித்ததாக யுவ சேனா அமைப்பினர் கமால் ரஷீத்கான் மீது போலீசில் புகார் செய்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் கமால் ரஷீத் கான் வெளிநாடுக்கு தப்பி சென்றுவிட்டடார். அவர் எங்கிருக்கிறார் என்பதே தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் நேற்று காலை அவர் மும்பை திரும்புவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற போலீசார் அவரை விமானநிலையத்தில் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வரும் போலீசார் இன்று அவரை மும்பை போரிவல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகிறார்கள்.