ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆலியா பட். அவருக்கும் பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரன்பீர் கபூருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றது. ஆலியா தற்போது தன்னுடைய முதல் குழந்தையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்.
பொதுவாகவே நடிகைகள் தாய்மை அடைந்தால் சினிமாவை விட்டு விலகிவிடுவார்கள். ஒரு சில நடிகைகள் மட்டுமே மீண்டும் நடிக்க வருவார்கள். ஆனால், அம்மாவானா பின்னும் சினிமாவை விட்டு விலகும் எண்ணம் இல்லை என ஆலியா தெரிவித்துள்ளார். தற்போது கர்ப்பமாக இருந்தாலும் ஆரோக்கியமாகவும் பிட்டாகவும் இருப்பதால் ஓய்வில் இல்லை என்றும் கூறியுள்ளார்.
தற்போது 'டார்லிங்ஸ், பிரம்மாஸ்திரா' படங்களில் நடித்து முடித்துள்ள ஆலியா, 'ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி, ஹார்ட் ஆப் ஸ்டோன்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். குழந்தை பெற்ற பின் ஒரு சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் புதிய படங்களில் நடிக்க ஒத்துக் கொள்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.