'டாக்சிக்' படத்தில் கங்காவாக நயன்தாரா! | திரிஷ்யம் முதல் பாகத்தின் பார்முலாவில் உருவாகும் 3ம் பாகம் : ஜீத்து ஜோசப் தகவல் | நடிகர் பிரித்விராஜின் தார்யா ஹிந்தி படப்பிடிப்பு நிறைவு | 'தி பெட்' படம், ஹீரோ ஸ்ரீகாந்த், ஹீரோயின் சிருஷ்டி புறக்கணிப்பு | விவாகரத்துக்கு பிறகும் ஒற்றுமையாக வலம் வரும் பிரியதர்ஷன் லிசி தம்பதி | ரஜினியின் அடுத்த பட இயக்குனர்?: நீடிக்கும் குழப்பம் | ரூ.50 கோடி வசூல் கிளப்பில் இணைந்த சர்வம் மாயா | கூட்ட நெரிசலால் கேன்சல் செய்யப்பட்ட ரேப்பர் வேடன் இசை நிகழ்ச்சி : ரயில் விபத்தில் பலியான ரசிகர் | 2025 தமிழ் சினிமா ஒரு ரீ-வைண்ட் | ஜன.3ல் 'பராசக்தி' பாடல் வெளியீட்டு விழா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு |

பாலிவுட் நடிகர் சல்மான்கானையும் அவரது தந்தை சலீம்கானையும் கொல்வோம் என்று ஒரு கும்பல் சலீம்கானுக்கு மிரட்டல் கடிதம் கொடுத்தது. இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டது. சல்மான்கானுக்கும், அவரது தந்தைக்கும், அவரது வீட்டுக்கும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக சல்மான்கானிடமும், சலீம் கானிடமும் வாக்குமூலத்தை போலீசார் பெற்றுள்ளனர். தங்களை கொலை செய்ய முயற்சிப்பது யார் என்று தங்களுக்கு தெரியவில்லை என்றும் கொலை செய்யும் அளவிற்கு எதிரிகள் யாரும் இல்லை என்றும் அவர்கள் போலீசில் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் பஞ்சாப் பாடகர் சித்துவை கொன்றது நாங்கள் தான் என்று தற்போது சிறையில் இருக்கும் பஞ்சாபை சேர்ந்த பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் அறிவித்திருந்தார். தற்போது சல்மான் கொலை மிரட்டலுக்கும் அவர் காரணமாக இருக்கலாம் என்கிற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர்.
இந்த தேடலில லாரன்ஸ் பிஷ்னோயின் கூட்டாளிகள் சிலர் போலீசிடம் சிக்கி உள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் சல்மான்கானை கொல்ல நாங்கள்தான் திட்டமிட்டோம், இதற்காக 4 லட்சம் ரூபாய் கொடுத்து நவீன துப்பாக்கியும் வாங்கினோம் என்று தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் இருந்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.