என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
பிரபல பாலிவுட் நடிகர் ராஜ்பால் யாதவ், ‛அர்த்' என்ற படத்தில் திருநங்கையாக நடித்திருக்கிறார். இந்த படத்தை பலாஷ் முச்சல் இயக்கியுள்ளார். ராஜ்பால் உடன் ரூபினா திலக், ஹிட்டன் தேஜ்வானி உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படம் ஓடிடி தளத்தில் வருகிற 10ம் தேதி வெளியாகிறது.
திருநங்கையாக நடித்திருப்பது குறித்து ராஜ்பால் கூறியதாவது: மும்பையில் வாழும் ஒரு திருநங்கையின் வாழ்க்கைதான் படம். ஒரு பாலின மாற்றம் ஒரு மனிதனை எப்படி புரட்டிப்போடுகிறது என்பது கதை. இந்த படத்தில் நிஜமான திருநங்கையை நடிக்க வைத்திருக்கலாமே... நீங்கள் ஏன் நடித்தீர்கள் என்று கேட்கிறார்கள். ஒரு விவசாயின் வாழ்க்கையை மையமாக வைத்து ஒரு படம் எடுக்கப்பட்டால், உண்மையான விவசாயி படத்தில் நடிக்க மாட்டார். அதேபோல், 'அர்த்' படத்தில் நான் திருநங்கையாக நடிக்கிறேன், அதே நேரத்தில் ஒரு தந்தையாகவும், கணவனாகவும் நடித்திருக்கிறேன். ஒரு திரைப்படம் முக்கியமாக பொழுதுபோக்கிற்காக உருவாக்கப்படுகிறது, ஆனால் ஒரு நடிகரால் மட்டுமே ஒரு கதாபாத்திரத்தின் பல அடுக்குகளுக்கு நியாயம் செய்ய முடியும் என்று நான் உணர்கிறே என்கிறார் ராஜ்பால்.