2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

பஞ்சாபில் சுட்டுக் கொல்லப்பட்ட பாடகர் சித்து மூஸ்வாபோல உங்களையும் கொல்வோம் என்று சல்மான்கான் மற்றும் அவரது தந்தைக்கு நேரடி கொலை மிரட்டல் வந்திருப்பது பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சல்மான் கானின் தந்தை சலீம் கான், மும்பை பாந்த்ரா பேருந்து நிலையம் பகுதியில் உள்ள பூங்காவில் தினமும் காலை நேரத்தில் நடைப்பயிற்சி செய்வது வழக்கம். அவருடன் அவரது பாதுகாவலரும் உடன் செல்வார். நடைபயிற்சி முடிந்து வழக்கமாக ஒரு இடத்தில் அவர் ஓய்வெடுப்பது வழக்கம்.
நேற்று அந்த இடத்தில் அழகான கடிதம் ஒன்று கிடந்தது. அதனை அவரது உதவியாளர் எடுத்து படித்தார். அந்த கடிதத்தில் 'சலீம் கான், சல்மான் கான்... விரைவில் சித்து மூஸ்வாலா போல்...' என்று எழுதப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த அவர் சலீம் கானிடம் அந்த கடித்தத்தை கொடுத்தார். அவர் மும்பை போலீசிடம் அந்த கடிதத்தை ஒப்படைத்தார்.
இது தொடர்பாக வழக்கு பதிந்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். சல்மான்கானுக்கும், அவரது தந்தைக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், பாந்த்ராவில் சல்மான்கான் குடியிருக்கும் கேலக்ஸி அடுக்குமாடி குடியிருப்புகளை சுற்றியும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.