ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள் செய்த ரகளை! தேவரா படவிழா ரத்து!! | யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்! - இயக்குனர் ஷங்கர் எச்சரிக்கை | சுயமரியாதை முக்கியம்... என்னிடம் மன்னிப்பு கேளுங்க : விஜய் படம் குறித்த வதந்திக்கு சிம்ரன் கடும் பதிலடி | எல்லை மீறும் இளசுகள்: தீயாய் பரவும் திரிஷா 'ஏஐ' வீடியோ | பிளாஷ்பேக் : குழந்தையாக வந்தார், சிறுமியாக மறைந்தார் : மின்னி மறைந்த ஷோபா வாழ்க்கை | கதையின் நாயகனாக விநாயகன் ; வில்லனாக மம்முட்டி | கவியூர் பொன்னம்மாவின் மறைவும் மஞ்சு வாரியரின் நிறைவேறாத ஆசையும் | செப்டம்பர் 27ல் நான்கு முனைப் போட்டி | 'ஜானு பாப்பா' என அழைக்கும் ரசிகர்கள் : ஜான்வி கபூர் மகிழ்ச்சி | பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் |
பஞ்சாபில் சுட்டுக் கொல்லப்பட்ட பாடகர் சித்து மூஸ்வாபோல உங்களையும் கொல்வோம் என்று சல்மான்கான் மற்றும் அவரது தந்தைக்கு நேரடி கொலை மிரட்டல் வந்திருப்பது பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சல்மான் கானின் தந்தை சலீம் கான், மும்பை பாந்த்ரா பேருந்து நிலையம் பகுதியில் உள்ள பூங்காவில் தினமும் காலை நேரத்தில் நடைப்பயிற்சி செய்வது வழக்கம். அவருடன் அவரது பாதுகாவலரும் உடன் செல்வார். நடைபயிற்சி முடிந்து வழக்கமாக ஒரு இடத்தில் அவர் ஓய்வெடுப்பது வழக்கம்.
நேற்று அந்த இடத்தில் அழகான கடிதம் ஒன்று கிடந்தது. அதனை அவரது உதவியாளர் எடுத்து படித்தார். அந்த கடிதத்தில் 'சலீம் கான், சல்மான் கான்... விரைவில் சித்து மூஸ்வாலா போல்...' என்று எழுதப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த அவர் சலீம் கானிடம் அந்த கடித்தத்தை கொடுத்தார். அவர் மும்பை போலீசிடம் அந்த கடிதத்தை ஒப்படைத்தார்.
இது தொடர்பாக வழக்கு பதிந்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். சல்மான்கானுக்கும், அவரது தந்தைக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், பாந்த்ராவில் சல்மான்கான் குடியிருக்கும் கேலக்ஸி அடுக்குமாடி குடியிருப்புகளை சுற்றியும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.