தர்ஷனுக்கு வழங்கிய ஜாமின் ரத்து : சுப்ரீம் கோர்ட் உத்தரவு | அரங்கம் அதிர, விசிலு பறக்க... வெளியானது கூலி : ரசிகர்கள் கொண்டாட்டம் | ரிலீஸாகாத ‛மஞ்சும்மேல் பாய்ஸ்' பட நடிகரின் பட காட்சிகள் ஆன்லைனில் லீக் ; உதவி இயக்குனர் மீது புகார் | நிவின்பாலி மீதான மோசடி வழக்கு விசாரணையை நிறுத்தி வைத்த நீதிமன்றம் | இந்தாண்டு பல பாடங்களை கற்றுத் தந்தது : ஹன்சிகா | வேட்பு மனு நிராகரிப்பு சரிதான் ; பெண் தயாரிப்பாளரின் கோரிக்கையை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | 2வது திருமண சர்ச்சைக்கு இடையில் முதல் மனைவியுடன் விழாவில் பங்கேற்ற மாதம்பட்டி ரங்கராஜ் | கிஸ் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் | முருகனாக நடித்த ஸ்ரீதேவி; 13 வயதில் ஹீரோயின் ஆனவர்: இன்று ஸ்ரீதேவியின் 62வது பிறந்தநாள் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து விமர்சனத்தில் சிக்கிய ஜான்வி கபூர்! |
பாலிவுட் கவர்ச்சி நடிகையான ராக்கி சாவந்த் சர்ச்சை நாயகி. அடிக்கடி எதையாவது செய்தோ, பேசியோ பரபரப்பு கிளப்புவார். கடைசியாக தனது காதல் கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாக கூறினார். அதன்பிறகு சில காலம் அமைதியாக இருந்தவர். இப்போது மீண்டும் அடுத்த சர்ச்சையை தொடங்கி விட்டார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், பழங்குடியின பெண்களை போல ஆடை அணிந்து அவர்களை கிண்டல் செய்வது போல பேசியுள்ளார். இதற்கு எதிர்ப்பு கிளம்பியது.
இந்த நிலையில் ஜார்க்கண்ட் மாநில கேந்த்ரிய சர்னா சமிதி என்ற அமைப்பின் தலைவர் ட்ரிக்கி பழங்குடியின மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியதாக ராக்கி சாவந்த் மீது ராஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் ராக்கி சாவந்த் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து ட்ரிக்கி கூறியிருப்பதாவது: நடிகை ராக்கி சாவந்த், அரை நிர்வாண ஆடை அணிந்தபடி, பழங்குடியினப் பெண்களை இழிவுப்படுத்தியுள்ளார். ஆபாசமான கருத்துகளையும் தெரிவித்துள்ளார். இதற்கு அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும், இல்லை என்றால் அவருக்கு எதிரான போராட்டம் தொடரும். என்கிறார்.