லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு | திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! | கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? | நல்ல கதைக்காக காத்திருக்கும் ஜோதிகா | அடுத்த படத்துல ஹீரோயின் உண்டா? சண்முக பாண்டியன் பதில் | ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா நடக்குமா? | விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி! |
பாலிவுட் கவர்ச்சி நடிகையான ராக்கி சாவந்த் சர்ச்சை நாயகி. அடிக்கடி எதையாவது செய்தோ, பேசியோ பரபரப்பு கிளப்புவார். கடைசியாக தனது காதல் கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாக கூறினார். அதன்பிறகு சில காலம் அமைதியாக இருந்தவர். இப்போது மீண்டும் அடுத்த சர்ச்சையை தொடங்கி விட்டார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், பழங்குடியின பெண்களை போல ஆடை அணிந்து அவர்களை கிண்டல் செய்வது போல பேசியுள்ளார். இதற்கு எதிர்ப்பு கிளம்பியது.
இந்த நிலையில் ஜார்க்கண்ட் மாநில கேந்த்ரிய சர்னா சமிதி என்ற அமைப்பின் தலைவர் ட்ரிக்கி பழங்குடியின மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியதாக ராக்கி சாவந்த் மீது ராஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் ராக்கி சாவந்த் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து ட்ரிக்கி கூறியிருப்பதாவது: நடிகை ராக்கி சாவந்த், அரை நிர்வாண ஆடை அணிந்தபடி, பழங்குடியினப் பெண்களை இழிவுப்படுத்தியுள்ளார். ஆபாசமான கருத்துகளையும் தெரிவித்துள்ளார். இதற்கு அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும், இல்லை என்றால் அவருக்கு எதிரான போராட்டம் தொடரும். என்கிறார்.