பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது | ரெட்ரோ டிரைலர் : விதவிதமாய் 'குக்' செய்துள்ள கார்த்திக் சுப்பராஜ் |
பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 14ம் தேதி வெளியான 'கேஜிஎப் 2' படம் ரூ.1100 கோடி வரை வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்த படத்தில் நடிகர் யஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அதீரா எனும் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டியிருந்தார். இந்நிலையில் இந்த படத்தில் நடித்தது குறித்து சஞ்சய் தத், மனம் திறந்து நெகிழ்ச்சியான பதிவினை தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து வெளியிட்டுள்ள பதிவில், எப்போதும் சில படங்கள் மற்றவைகளை விட சிறப்பாக இருக்கும். அந்த வகையில் எனக்கு கிடைத்த படம்தான் 'கேஜிஎஃப் 2'. இந்தப் படம் என்னுடைய நடிப்புத் திறமையை எனக்கே மீண்டும் நினைவூட்டியது. இதை நான் இதயத்திலிருந்து உணர்ந்துள்ளேன். இந்தப் படம் முடியும்போது சினிமா என்றால் என்ன என்று எனக்கு புரிய வைத்தது.
இயக்குனர் பிரசாந்த் நீல், எனக்கும் ஆதிராவை காட்டினார். என்னுடைய கதாபாத்திரம் மிரட்டலாக வந்ததற்கு இயக்குனர் பிரசாந்த் நீல் தான் காரணம். ஒரு கேப்டன் போன்று எங்களையெல்லாம் வழிநடத்தினார். குடும்பத்தினரும் ரசிகர்களும் தான் என்னுடைய பலம் என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.