படம்... பாராட்டு... பயம்... மனம் திறந்த ஸ்ரீகணேஷ் | நானும் மக்கள் பிரதிநிதி தான் - மதுவந்தி | விஷால் கோரிக்கையை நிராகரித்த சினிமா அமைப்புகள் | வெற்றிக்காக காத்திருக்கும் அப்பாவும், மகனும் | ஆட்டுக்கார அலமேலு, கல்யாணராமன், சுல்தான் : ஞாயிறு திரைப்படங்கள் | விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் |
இந்த வருடம் தீபாவளியை துபாயில் கொண்டாடியுள்ளார் மோகன்லால். அதுவும் அன்றைய தினம் துபாயில் தங்கியுள்ள சஞ்சய் தத் வீட்டிற்கு சென்று அவருடன் சேர்ந்து சில மணி நேரங்கள் மகிழ்ச்சியாக செலவிட்டுள்ளார் மோகன்லால். இந்த வருடம் அவர் துபாயில் தீபாவளி கொண்டாட காரணம் இருக்கிறது.
கடந்த வருடம் தான் துபாய் டவுன்டவுனில் 51 அடுக்குகள் கொண்ட கட்டடம் ஒன்றில் புதிய பிளாட் வாங்கினார் மோகன்லால். அதனால் இந்த வருடம் தீபாவளியை தனது புதிய வீட்டில் கொண்டாடியுள்ளார். அதுமட்டுமல்ல, கடந்த வருடம் இதே நவம்பரில் தான் புற்றுநோய் சிகிச்சை பெற்று, துபாய் திரும்பி ஓய்வெடுத்து வந்த நடிகர் சஞ்சய் தத்தை சந்தித்து நலம் விசாரித்தார் மோகன்லால். அதனால் இந்தமுறையும் தீபாவளிக்காக துபாய் சென்றபோது சஞ்சய் தத் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்துள்ளார் மோகன்லால்.