சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் | ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு | சர்தார் 2 படப்பிடிப்பு நிறைவு பெற்றது | கமல்ஹாசன் தயாரிப்பில் அருண் குமார்? | தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் |
இந்த வருடம் தீபாவளியை துபாயில் கொண்டாடியுள்ளார் மோகன்லால். அதுவும் அன்றைய தினம் துபாயில் தங்கியுள்ள சஞ்சய் தத் வீட்டிற்கு சென்று அவருடன் சேர்ந்து சில மணி நேரங்கள் மகிழ்ச்சியாக செலவிட்டுள்ளார் மோகன்லால். இந்த வருடம் அவர் துபாயில் தீபாவளி கொண்டாட காரணம் இருக்கிறது.
கடந்த வருடம் தான் துபாய் டவுன்டவுனில் 51 அடுக்குகள் கொண்ட கட்டடம் ஒன்றில் புதிய பிளாட் வாங்கினார் மோகன்லால். அதனால் இந்த வருடம் தீபாவளியை தனது புதிய வீட்டில் கொண்டாடியுள்ளார். அதுமட்டுமல்ல, கடந்த வருடம் இதே நவம்பரில் தான் புற்றுநோய் சிகிச்சை பெற்று, துபாய் திரும்பி ஓய்வெடுத்து வந்த நடிகர் சஞ்சய் தத்தை சந்தித்து நலம் விசாரித்தார் மோகன்லால். அதனால் இந்தமுறையும் தீபாவளிக்காக துபாய் சென்றபோது சஞ்சய் தத் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்துள்ளார் மோகன்லால்.