மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
பாலிவுட்டில் அக்சய் குமார், கத்ரினா கைப் நடிப்பில் ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள சூர்யவன்ஷி படம் கடந்த வெள்ளியன்று தியேட்டர்களில் வெளியானது. ரோஹித் ஷெட்டி படம் என்றாலே எப்போதுமே ஆக்சன் புல் மீல்ஸாகவே இருக்கும்.. அதேபோல இந்தப்படத்தின் சண்டை காட்சிகளும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. இந்தநிலையில் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக அமிதாப் பச்சன் நடத்தி வரும் கோன் பனேஹா குரோர்பதி சீசன்-13 நிகழ்ச்சியில் அக்சய், காத்ரீனா மற்றும் ரோஹித் ஷெட்டி ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது படத்தில் இடம்பெற்றுள்ள சில சண்டை காட்சிகளின் கிளிப்புகள் திரையிட்டு காட்டப்பட்டன. குறிப்பாக அக்சய் குமார் ஹெலிகாப்டரில் தொங்கியபடி நடித்திருந்த ஒரு காட்சியை பார்த்ததும் அமிதாப் அதிர்ந்து போனார். அந்த காட்சியை படமாக்கியபோது அக்சய் எடுத்த ரிஸ்க் குறித்து ரோஹித் ஷெட்டி அமிதாப்பிடம் விளக்கினார். அவர்களது முயற்சியை அமிதாப் பாராட்டினாலும், இனி இதுபோன்ற அபாயகரமான சண்டை காட்சிகளில் ரிஸ்க் எடுக்க கூடாது என அக்சய் குமாரை உரிமையுடன் எச்சரிக்கவும் செய்தார்.