300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' | 3 ஹீரோக்கள் இணையும் படம் | பிளாஷ்பேக்: மூன்று திரைப்படங்களில் மட்டுமே நடித்து, முதன்மை குழந்தை நட்சத்திரம் என்ற உச்சம் தொட்ட “பேபி சரோஜா” | பிரதீப்பின் ‛எல்ஐகே' தள்ளிவைப்பு : 'டியூட்' தயாரிப்பாளர் மீது 'எல்ஐகே' தயாரிப்பாளர் குற்றச்சாட்டு |
ஓம் ரவுத் இயக்கத்தில் பிரபாஷ், சயீப்அலிகான், கிருதி சனோன், சன்னிசிங் உள்பட பலர் நடித்து வரும் படம் ஆதி புருஷ். ராமாயணத்தை மையமாகக்கொண்ட கதையில் உருவாகி வரும் இப்படத்தில் பிரபாஸ் ராமர் வேடத்திலும், கிருதி சனோன் சீதையாகவும், சயீப் அலிகான் ராவணன் வேடத்திலும் நடிக்கிறார்கள்.
இப்படத்தில் தனக்கான காட்சிகளில் ஏற்கனவே சயீப் அலிகான் நடித்து முடித்து விட்ட நிலையில் தற்போது கிருதி சனோனும் தனது காட்சிகளில் நடித்து முடித்து விட்டார். இதை அவர் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். அதோடு, இந்த பயணம் இவ்வளவு சீக்கிரத்தில் முடிந்து விட்டது என்பதை நம்ப முடியவில்லை. நான் நடித்ததில் மிகவும் பெருமைப்படுகிற இந்த சூப்பர் ஸ்பெசல் கேரக்டரை நான் விட்டு விட்டதால் என் இதயம் அதில் மூழ்குகிறது. இந்த அனுபவத்தை நான் மறக்க மாட்டேன். ஜானகியின் அன்பான இதயம்,அவளது பக்தியுள்ள ஆன்மா மற்றும் அவளது அசைக்க முடியாத வலிமை, எங்கோ எனக்குள் எப்போதும் இருக்கும் என்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள கிருதி சனோம், ஆதி புருஷ் இயக்குனர் ஓம்ரவுத்துக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
அதில், உங்கள் பார்வை அசாதாரணமானது. உலகம் பார்க்கும் வரை என்னால் காத்திருக்க முடியாது. ஆதி புருஷ் நான் எப்போது பெருமைப்படும் ஒரு படம் என்று தெரிவித்துள்ளார் கிருதி சனோன்.இப்படம் 2022ஆம் ஆண்டு ஆகஸ்டு 11-ந்தேதி திரைக்கு வருகிறது.