ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
சொகுசு கப்பலில் போதை விருந்தில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்பட 8 பேர் அதிரடி சோதனையில் பிடிபட்டு கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சிறையில் இருக்கும் ஆர்யன் கான் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அவர் மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுளார்.
சிறையில் இருக்கும் மகனின் கை செலவுக்காக ஷாருக்கான் 4500 ரூபாய் மணியார்டர் அனுப்பி உள்ளார். சிறை விதிமுறைகள் 5 ஆயிரத்துக்கும் குறைவான தொகையை மட்டும் அனுமதிக்கும் என்பதால் இந்த தொகையை அனுப்பி உள்ளார். இந்த தகவலை சிறை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இந்த பணத்தை வைத்து அவர் சிறை கேண்டீனில் உணவு பொருள் வாங்கி சாப்பிடலாம், துணிகளை சலவை செய்ய கொடுக்கலாம். சிகை அலங்காரம் செய்து கொள்ளலாம்.