விக்ரமின் அடுத்த மூன்று படங்கள் குறித்து தகவல் இதோ | காந்தாரா சாப்டர் 1 படத்தின் டிஜிட்டல் உரிமை விற்பனை | தி மெட்ராஸ் மிஸ்டரி வெப் தொடரின் முதல் பார்வை | செல்போனை அதிகமாக யூஸ் பண்ணும் ஸ்ருதிஹாசன் | புதிய பட நிறுவனம் தொடங்கி கதையின் நாயகியாக உருவெடுக்கும் சிம்ரன் | மோசமான தோல்வியை சந்தித்த அனுஷ்காவின் காட்டி | கவிதையை ஒரு பாடலாக மாற்றும் கலை நீங்கள்... : ரவி மோகனை வாழ்த்திய பாடகி கெனிஷா | ஹீரோவாகும் இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகன் ஹர்ஷவர்தன் | காக்கா முட்டை, சைவம், அநீதி, விசாரணை படங்களுக்கு சம்பளம் வாங்கவில்லை : ஜிவி பிரகாஷ் | கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு வைர கிரீடம், தங்க நெக்லஸ், வாள் : காணிக்கை வழங்கிய இளையராஜா |
'பாராட்டு'க்கு மற்றொரு வார்த்தை கொண்ட ஓடிடி நிறுவனம் ஒன்று விரைவில் மூடப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்குத் திரையுலகத்தின் பெரிய குடும்பத்திற்குச் சொந்தமானது அந்த நிறுவனம். தெலுங்கில் மட்டுமல்லாது தமிழிலும் அவர்களது சேவையை ஓரிரு வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்தார்கள். சில படங்களை வாங்கி ஓடிடியில் வெளியிட்டார்கள். வெப் தொடர்களையும் தயாரித்தார்கள். ஆனால், உலக அளவில் பிரபலமாக உள்ள ஓடிடி தளங்களுடன் அந்த 'பாராட்டு' ஓடிடி தளத்தால் போட்டி போட முடியவில்லையாம். அதனால், தமிழில் அவர்களது சேவையை நிறுத்திவிடலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளார்களாம்.
மற்ற பிரபலமான ஓடிடி நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை வாங்கினால் அனைத்து மொழி சேவைகளையும் வழங்கி வருகின்றன. ஆனால், அந்த 'பாராட்டு' ஓடிடி தளம் ஒவ்வொரு மொழிக்கும் தனித்தனியாக கட்டணம் வசூலிப்பதே அதன் தோல்விக்குக் காரணம் என ஓடிடி வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். சரியான பணியார்களை வேலைக்கு எடுக்கவில்லை என்றாலும் தோல்வியைத் தழுவ நேரிடும் என்றும் மேலும் சொல்கிறார்கள். குறுகிய காலத்தில் ஒரு ஓடிடி நிறுவனம் ஆரம்பமாகி மூடப்படுவது தமிழ்த் திரையுலகினருக்கு இழப்புதான்.