ஊழல் அரசியல்வாதிகளை தட்டிக் கேட்கும் ‛ஜனநாயகன்' | ஆபாச வெப் சீரிஸ் : 25 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை | ‛விஸ்வாம்பரா' படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மவுனி ராய் | கதையில் சமரசம் செய்யாத ராஜமவுலி : பிருத்விராஜ் வெளியிட்ட தகவல் | டியூட் படத்தில் சிவகார்த்திகேயனா? வைரலாகும் வீடியோ | கூலி படத்தில் கமலா... : லோகேஷ் கனகராஜ் அளித்த பதில் | தற்கொலைக்கு முயற்சித்தாரா ‛டிக் டாக்' இலக்கியா... : ஸ்டன்ட் இயக்குனர் மீது குற்றச்சாட்டு | மீண்டும் இசையில் கவனம் செலுத்தப் போகிறேன்: விஜய் ஆண்டனி | மீண்டும் ‛அந்த 7 நாட்கள்' படத்தில் நடிக்கும் கே.பாக்யராஜ் | பிளாஷ்பேக் : ஒரே தமிழ் படத்தில் நடித்த வங்காள நடிகர் |
'பாராட்டு'க்கு மற்றொரு வார்த்தை கொண்ட ஓடிடி நிறுவனம் ஒன்று விரைவில் மூடப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்குத் திரையுலகத்தின் பெரிய குடும்பத்திற்குச் சொந்தமானது அந்த நிறுவனம். தெலுங்கில் மட்டுமல்லாது தமிழிலும் அவர்களது சேவையை ஓரிரு வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்தார்கள். சில படங்களை வாங்கி ஓடிடியில் வெளியிட்டார்கள். வெப் தொடர்களையும் தயாரித்தார்கள். ஆனால், உலக அளவில் பிரபலமாக உள்ள ஓடிடி தளங்களுடன் அந்த 'பாராட்டு' ஓடிடி தளத்தால் போட்டி போட முடியவில்லையாம். அதனால், தமிழில் அவர்களது சேவையை நிறுத்திவிடலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளார்களாம்.
மற்ற பிரபலமான ஓடிடி நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை வாங்கினால் அனைத்து மொழி சேவைகளையும் வழங்கி வருகின்றன. ஆனால், அந்த 'பாராட்டு' ஓடிடி தளம் ஒவ்வொரு மொழிக்கும் தனித்தனியாக கட்டணம் வசூலிப்பதே அதன் தோல்விக்குக் காரணம் என ஓடிடி வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். சரியான பணியார்களை வேலைக்கு எடுக்கவில்லை என்றாலும் தோல்வியைத் தழுவ நேரிடும் என்றும் மேலும் சொல்கிறார்கள். குறுகிய காலத்தில் ஒரு ஓடிடி நிறுவனம் ஆரம்பமாகி மூடப்படுவது தமிழ்த் திரையுலகினருக்கு இழப்புதான்.