பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
ஜீ தமிழ் தொலைக்காட்சியின் ஹிட் தொடர்கள் வரிசையில் நீண்ட நாட்களாக ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி மற்றும் சத்யா ஆகிய தொடர்கள் முக்கிய இடத்தை பிடித்து வந்தன. இதில் 'ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி' தொடர் அதிக எடையுள்ள கதாநாயகியை வைத்து புதுமையான கதைக்களத்துடன் 1000 எபிசோடுகளை வெற்றிகரமாக கடந்து சாதனை படைத்தது. ரசிகர்கள் மத்தியிலும் இந்த தொடர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
அதேப்போல் மற்றொரு தொடரான சத்யாவிலும் தைரியமான பெண்ணான ரெளடி பேபி சத்யாவுக்கும் பணக்கார பிஸினஸ் இளைஞரான அமுல் பேபி பிரபுவிற்கும் இடையே நடக்கும் காதல் கதை சமூக வலைத்தளங்களில் இளைஞர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் இந்த இரண்டு தொடர்களுமே வருகிற அக்டோபர் 24 ஆம் தேதியோடு முடிய போவதாக ஜீ தமிழ் தொலைக்காட்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஒரு புரொமோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் இரண்டு தொடர்களின் நாயகன்கள், நாயகிகள் சில தவிர்க்க முடியாத காரணத்தால் இந்த தொடர்கள் முடிவுக்கு வருகின்றன. இவ்வளவு நாள் ரசிகர்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி. பிரியமுடியாமல் தான் சொல்கிறோம் குட்பை என தெரிவித்துள்ளனர்.
ஆனால், தொடர்கள் முடித்து வைக்கப்படுவதற்கான உண்மையான காரணங்கள் என்ன என்பது குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை. திடீரென வெளிவந்த அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் சீரியல்களை தொடரும்படியும் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு கமெண்டுகளில் வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.