திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
ஜீ தமிழ் தொலைக்காட்சியின் ஹிட் தொடர்கள் வரிசையில் நீண்ட நாட்களாக ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி மற்றும் சத்யா ஆகிய தொடர்கள் முக்கிய இடத்தை பிடித்து வந்தன. இதில் 'ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி' தொடர் அதிக எடையுள்ள கதாநாயகியை வைத்து புதுமையான கதைக்களத்துடன் 1000 எபிசோடுகளை வெற்றிகரமாக கடந்து சாதனை படைத்தது. ரசிகர்கள் மத்தியிலும் இந்த தொடர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
அதேப்போல் மற்றொரு தொடரான சத்யாவிலும் தைரியமான பெண்ணான ரெளடி பேபி சத்யாவுக்கும் பணக்கார பிஸினஸ் இளைஞரான அமுல் பேபி பிரபுவிற்கும் இடையே நடக்கும் காதல் கதை சமூக வலைத்தளங்களில் இளைஞர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் இந்த இரண்டு தொடர்களுமே வருகிற அக்டோபர் 24 ஆம் தேதியோடு முடிய போவதாக ஜீ தமிழ் தொலைக்காட்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஒரு புரொமோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் இரண்டு தொடர்களின் நாயகன்கள், நாயகிகள் சில தவிர்க்க முடியாத காரணத்தால் இந்த தொடர்கள் முடிவுக்கு வருகின்றன. இவ்வளவு நாள் ரசிகர்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி. பிரியமுடியாமல் தான் சொல்கிறோம் குட்பை என தெரிவித்துள்ளனர்.
ஆனால், தொடர்கள் முடித்து வைக்கப்படுவதற்கான உண்மையான காரணங்கள் என்ன என்பது குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை. திடீரென வெளிவந்த அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் சீரியல்களை தொடரும்படியும் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு கமெண்டுகளில் வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.