‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? | ஆண் ஆதிக்கம் இருப்பது கசப்பான உண்மை : கீர்த்தி சுரேஷ் | 'ஆண் பாவம் பொல்லாதது'..... முதல் பட்டியலில் நீளும் ஓடிடி ரிலீஸ்...! | சிக்கலில் இருந்து மீண்ட ‛கருப்பு' | விஜய் தேவரகொண்டா படத்தில் ‛தி மம்மி' பட வில்லன் | லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தின் அப்டேட் | கிரிக்கெட்டர் ஸ்ரீகாந்த் மகன் அனிருத்தா உடன் நடிகை சம்யுக்தா திருமணம் | காசியில் தனுஷ்: கங்கைக்கு ஆரத்தி எடுத்து பிரார்த்தனை | ரீரிலீஸ் படத்துக்கு ஆதரவு கொடுக்காத ஹீரோக்கள் |

சின்னத்திரை நடிகர்களான அபிநவ்யா - தீபக்குமார் தங்களது காதல் குறித்து சமீபத்தில் அறிவித்திருந்த நிலையில் அவர்களுக்கு தற்போது நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.
செய்திவாசிப்பாளராக பணியாற்றிய அபிநவ்யா சீரியல்களின் மூலம் சின்னத்திரைக்கு நடிக்க வந்தார். தற்போது அவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சித்திரம் பேசுதடி சீரியலில் நடித்து வருகிறார். அபிநவ்யா அதே சேனலில் ஒளிபரப்பாகும் என்றென்றும் புன்னகை தொடரில் கதநாயகனாக நடித்து வரும் தீபக்குமார் என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் தாங்கள் காதலித்து வருவதை அண்மையில் இன்ஸ்டாகிராம் மூலம் ரசிகர்களுக்கு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் அவர்களது நிச்சயதார்த்தம் சில தினங்களுக்கு முன் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. அதன் வீடியோவை தற்போது இருவரும் தங்களது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளனர். இதனையடுத்து அபிநவ்யா - தீபக்குமாருக்கு சகநடிகர்களும், ரசிகர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.