'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் |

தென்னிந்திய மொழிகளில் தமிழ் மற்றும் கன்னட சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நேஹா கவுடா. தமிழில் இவர் நடித்த ‛கல்யாண பரிசு, பாவம் கணேசன்' ஆகிய இரண்டு தொடர்களுமே சூப்பர் ஹிட். கடந்த 2018ம் ஆண்டு காதலர் சந்தன் கவுடாவை திருமணம் முடித்த இவருக்கு 6 வருடங்களுக்கு பிறகு அண்மையில் தான் அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. குடும்ப பொறுப்புகளின் காரணமாக நடிப்பிற்கு பிரேக் விட்டுள்ள நேஹா கவுடா அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் சிறுவயதில் தனக்கு நிகழ்ந்த பாலியல் ரீதியான தொல்லை குறித்து மனம் திறந்துள்ளார்.
அவரது பேட்டியில், ‛‛நான் நான்காம் வகுப்பு படிக்கும் போது ஒரு நாள் வீட்டில் தூங்கி எழுந்த போது அம்மா வீட்டில் இல்லாததால் அவரை தேடி வெளியே வந்தேன். அப்போது பக்கத்து தெருவில் இருந்த ஒருவன் என் அப்பாவை நன்றாக தெரியும் என்று கூறி ஒரு வாட்ச் கடைக்குள் அழைத்து சென்று கதவை சாத்தினான். அங்கே என்னிடம் மிகவும் தப்பாக நடந்து கொண்டான். நான் பயத்தில் அழ ஆரம்பித்தேன். என்னிடம் கத்தியை காட்டி அழாதே என்று மிரட்டி, அடித்தான். ஒருவழியாக அவனிடம் இருந்து தப்பித்து வந்துவிட்டேன். அதன்பிறகு சில வருடங்கள் கழித்து ‛குட் டச் பேட் டச்' குறித்து ஆசிரியர் சொல்லி கொடுத்த போது தான், அன்று எனக்கு என்ன நிகழ்ந்தது என்பது எனக்கு புரிந்தது. அந்த சம்பவத்தை இப்போது நினைத்தாலும் பயமாக இருக்கிறது'' என்று கூறியிருக்கிறார்.