ஜூலை 25ல் ‛அவதார் 3' டிரைலர் | இசை நிகழ்ச்சி! கெனிஷா உடன் இலங்கை சென்ற ரவி மோகன் | ‛பராசக்தி' படத்தில் இணைந்த ராணா | வார் 2 படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு | மாரி செல்வராஜின் 'பைசன்' பிஸினஸ் எப்படி? | இறுதிக்கட்டத்தை எட்டிய ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன் படம் | இலங்கை தமிழ் படத்தில் டி.ஜே.பானு | புராண அனிமேஷன் படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | வசூலை குவிக்க அடுத்து வருகிறது 'ட்ரான்: ஏரிஸ்' | அனிருத் இசை நிகழ்ச்சி திடீர் ரத்து |
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ‛சரிகமப' நிகழ்ச்சி பல திறமையான பாடகர்களை சின்னத்திரை வாயிலாக மக்களிடம் பிரபலபடுத்தியுள்ளது. ஜூனியர், சீனியர் என இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டு வரும் இந்நிகழ்ச்சியானது தற்போது சிறுவர்களுக்கான 'சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 4' ஆக ஒளிபரப்பாகி வருகிறது. எஸ்பி சரண், ஸ்ரீநிவாஸ், சைந்தவி, ஸ்வேதா மோகன் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்க, அர்ச்சனா இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்தவாரம் லெஜண்ட்ரி சுற்றாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் எஸ்பி பாலசுப்பிரமணியன், மலேசியா வாசுதேவன், கேஜே ஜேசுதாஸ் என தமிழ் திரைப்பட பாடகர்களில் ஆளுமைகளாக இருந்தவர்களின் பாடலை போட்டியாளர்கள் பாடினர். இந்த சுற்றில், மஹதி என்கிற சிறுமி எஸ்பிபியின் மிகவும் பிரபலமான பாடலான ‛மண்ணில் இந்த காதலின்றி' என்கிற பாடலை அவரை போலவே மூச்சுவிடாமல் பாடி அசத்தியிருக்கிறார்.
இதை பார்த்து வியந்த நடுவர்கள் அனைவரும் மஹதியை பாராட்டினர். அப்போது எஸ்பிபியின் மகன் எஸ்பி சரண் மிகவும் நெகிழ்ந்து மஹதியை தூக்கி முத்தமிட்டு வாழ்த்தியுள்ளார். மேலும், அவர் பேசியபோது, 'என் அப்பா இந்த பாடலை மூச்சுவிடாமல் பாடவில்லை. அவரே இதை பல இடங்களில் சொல்லியிருக்கிறார். ஆனால், மஹதி இந்த பாடலை ஒரே மூச்சில் பாடியிருப்பது மிகப்பெரிய விஷயம்' என அவரை பெருமைப்படுத்தி வாழ்த்தினார்.