ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : உலகம் முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோற்ற கதை | ‛பெத்தி' பட பாடலுக்கு ஆயிரம் பேருடன் நடனமாடிய ராம்சரண் | தீபாவளி போட்டியில் டீசல் : ஆக்ஷன் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் |
பிரபல சின்னத்திரை தொகுப்பாளரான மா.கா.பா ஆனந்த் மீது அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது. திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மா.கா.பா ஆனந்த் தொகுப்பாளராக பங்கேற்றுள்ளார். அந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் உடற்பயிற்சி விழிப்புணர்வு செய்யப்போவதாக அனுமதி வாங்கிவிட்டு, ஸ்ட்ரீட் டே கொண்டாட ஏற்பாடு செய்ததாகவும் அதுவும் கடைசி சமயத்தில் நிறுத்தப்பட்டதாகவும் தெரிய வருகிறது.
இதனால் ஏமாந்து போன மக்கள் நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள், தொகுப்பாளர் மா.கா.பா ஆனந்த் உட்பட 50 பேர் மேல் போலீஸில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.