காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் பாடகி மங்லி. புஷ்பா திரைப்படத்தில் இடம்பெற்ற ஊ அண்டாவா என்கிற பாடலை தெலுங்கில் இவரது சகோதரி இந்திரவதி பாடியிருந்தார். இதே பாடலை கன்னடத்தில் மங்லி பாடி புகழ் பெற்றார். சமீபத்தில் செவ்வலே என்கிற பகுதியில் உள்ள திரிபுரா ரிசார்ட்டில் தனது பிறந்தநாளை கொண்டாடினார் மங்லி. இந்த நிகழ்வில் அவரது நண்பர்களும் திரையுலகை சேர்ந்த பல பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
அந்த சமயத்தில் திடீரென அங்கே வந்த போலீசார் சோதனை செய்தபோது அனுமதிக்கப்படாத வெளிநாட்டு மதுபானங்கள் அங்கே பயன்படுத்தப்பட்டதும் மேலும் ஒரு சிலர் போதைப்பொருளை உபயோகித்ததும் தெரியவந்தது. அது மட்டுமல்ல இப்படி ஒரு நிகழ்வை நடத்துவதற்கு முறைப்படி போலீசாரிடம் இருந்து முறைப்படி எந்த அனுமதியும் மங்லி பெறவில்லையாம். இதனைத் தொடர்ந்து மங்லி மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்க அந்த ரிசார்ட் நிர்வாகத்தினர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.