பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

சின்னத்திரை பிரபலமான அபிராமி தொலைக்காட்சி தொகுப்பாளராக மீடியாவில் அறிமுகமானார். சில படங்களில் நடித்துள்ள அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழ்நாட்டு ரசிகர்களிடம் அதிகம் ரீச்சானார். அதன்பிறகு சினிமாவில் முழுநேர நடிகையாக வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அபிராமிக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இந்நிலையில், ஜீ தமிழில் ஒளிபரப்பான வீரா என்கிற தொடரில் கெஸ்ட் ரோலில் நடிக்க ஆரம்பித்த அபிராமி தற்போது முழுநேர சீரியல் நடிகையாக மாறியிருக்கிறார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் மற்றொரு தொடரான நினைத்தேன் வந்தாய் தொடரில் சுடர் கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஜாஸ்மின் ராத் தற்போது விலகிவிட்டார். அவருக்கு பதிலாக சுடர் கதாபாத்திரத்தில் இனி அபிராமி தான் நடிக்கிறார்.