சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

சினிமாவுக்கு முன் இமான் அண்ணாச்சி சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நெல்லை-தூத்துக்குடி தமிழில் பேசி அசத்தி மக்கள் மனதில் இடம் பிடித்தார் இமான் அண்ணாச்சி. இன்று வெள்ளித்திரையில் பிரபலமான காமெடி நடிகராக வலம் வருகிறார். இவர் அண்மையில் அளித்துள்ள பேட்டியில் தனது சினிமா பயணம் குறித்து பேசியுள்ளார்.
அதில், 'நான் சின்ன வயசுலேயே சினிமாவுல காமெடியனா நடிக்க ஆசைப்பட்டேன். ஊர்ல எல்லோரும் நான் நல்லா சிரிக்க வைக்கிறதா சொல்லி சினிமாவுல நடிச்சா என்னன்னு கேட்டாங்க. உடனே மஞ்சப்பையை தூக்கிட்டு சென்னைக்கு வந்துட்டேன். முதல்ல ஒரு மளிகை கடைல வேலைக்கு சேர்ந்தேன். அங்க நான் சினிமாவுல நடிக்க தான் வந்திருக்கேன்னு தெரிஞ்சப்போ வேலைய விட்டு அனுப்பிட்டாங்க. அப்புறம் ஒரு கேமரா கடைல சேர்ந்தேன். அதுக்கப்புறம் காசுக்காக ரோட்டுல காய்கறி வியாபாரம் செஞ்சேன். அப்பதான் என்ன நம்பி பொண்ணையும் கொடுத்து கல்யாணம் பண்ணி வச்சாங்க. பொண்டாட்டி நகைய பணம் தேவைக்காக ஒன்னு ஒன்னா வித்துட்டேன். ஆனா இப்ப சினிமாவுல வாய்ப்பு கிடைச்சு சம்பாதிச்ச அப்புறம் நூறு பவுனா அவங்களுக்கு திருப்பி கொடுத்துட்டேன்' என்று தனது சினிமா பயணம் குறித்து இமான் அண்ணாச்சி கூறியுள்ளார்.