நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சின்னத்திரை நடிகையான ரோஷினி ஹரிபிரியன் பாரதி கண்ணம்மா தொடர் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றார். அந்த தொடரில் இருந்து பாதியிலேயே வெளியேறிய அவர், இனி சினிமாக்களில் மட்டுமே கவனம் செலுத்த போவதாக தெரிவித்திருந்தார். அதற்கு காரணம், பாரதி கண்ணம்மா தொடரில் நடித்ததால் ஜெய் பீம் போன்ற சில ஹிட் படங்களின் வாய்ப்புகளை இழந்தது தான். அதன்பின் எவ்வளவு தீவிரமாக தேடியும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டும் ரோஷினிக்கு சினிமா வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்நிலையில் சசிகுமார், உன்னி முகுந்தன், சூரி ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள கருடன் படத்தில் ரோஷினி ஹரிபிரியன் நெகட்டிவ் ரோலில் நடிப்பில் மிரட்டியிருக்கிறார். ரோஷினியின் சினிமா என்ட்ரி ரசிகர்களுக்கு மிகவும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. அதேசமயம் ரோஷினி இதுபோல் நல்ல கதைகளை, கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்றும் ரசிகர்களின் அட்வைஸ் குவிந்து வருகிறது.