தெலுங்கானா மாநில சினிமா விருதுகள்: நேரில் விருது பெற்ற அல்லு அர்ஜுன் | அப்பாவை அப்படி பார்த்தது மகிழ்ச்சி: கீர்த்திபாண்டியன் நெகிழ்ச்சி | கவிஞர்.நா.முத்துக்குமார் இசைச்கச்சேரி: கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் பங்கேற்பு | மணிரத்னத்தை மறுத்தாரா ரஜினி? | விரைவில் இயக்குனராகும் பார்த்திபன் மகன் ராதாகிருஷ்ணன் | தயாராகிறார் அடுத்த கேப்டன் | நட்பு வட்டார படங்களில் நடிப்பு: புலம்பும் நடிகை | கலையும் கருணையும்... அருண்மொழி தேவன் | நடிப்பு, பாட்மின்டன் ஸ்ரீசுவேதா-வின் விருப்பங்கள் | காதோடு தான் பேசுவேன்...! குரலுக்கு ஒரு கோபிகா |
சின்னத்திரை நடிகையான ரோஷினி ஹரிபிரியன் பாரதி கண்ணம்மா தொடர் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றார். அந்த தொடரில் இருந்து பாதியிலேயே வெளியேறிய அவர், இனி சினிமாக்களில் மட்டுமே கவனம் செலுத்த போவதாக தெரிவித்திருந்தார். அதற்கு காரணம், பாரதி கண்ணம்மா தொடரில் நடித்ததால் ஜெய் பீம் போன்ற சில ஹிட் படங்களின் வாய்ப்புகளை இழந்தது தான். அதன்பின் எவ்வளவு தீவிரமாக தேடியும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டும் ரோஷினிக்கு சினிமா வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்நிலையில் சசிகுமார், உன்னி முகுந்தன், சூரி ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள கருடன் படத்தில் ரோஷினி ஹரிபிரியன் நெகட்டிவ் ரோலில் நடிப்பில் மிரட்டியிருக்கிறார். ரோஷினியின் சினிமா என்ட்ரி ரசிகர்களுக்கு மிகவும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. அதேசமயம் ரோஷினி இதுபோல் நல்ல கதைகளை, கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்றும் ரசிகர்களின் அட்வைஸ் குவிந்து வருகிறது.