தள்ளிப்போகிறது ஜிவி பிரகாஷின் இரண்டு படங்கள்? | பெண் கூறிய குற்றச்சாட்டுக்கு விஜய்சேதுபதி பதில் | '3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? |
டிக்-டாக் பிரபலமான தனலெட்சுமி பிக்பாஸ் நிகழ்ச்சியில் எண்ட்ரி கொடுத்து கடைசி வரை தாக்குப்பிடித்தார். ஆரம்பத்தில் தனலெட்சுமியை பலரும் வெறுத்து ஒதுக்கினாலும், அவர் வெளியேறிய சமயத்தில் பல லட்சக்கணக்கான ரசிகர்களின் மனதை கவர்ந்திருந்தார். இதனையடுத்து தனலெட்சுமிக்கு பட வாய்ப்புகள் கிடைக்குமென பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், தற்போது வரை அவருக்கு வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் தனலெட்சுமி அண்மையில் வெளியிட்டுள்ள பதிவால் ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர். அதில், தனலெட்சுமியின் அம்மா, அவரது பெயரையோ புகைப்படத்தையோ தனலெட்சுமி எங்கேயும் பயன்படுத்தக் கூடாது என்றும், தனலெட்சுமிக்கும் தனக்கும் எந்தவித சம்மந்தமும் கிடையாது என்றும் நோட்டீஸ் அனுப்பியுள்ளதை குறிப்பிட்டுள்ளார். மேலும் இதுகுறித்து தற்போது எதுவும் சொல்வதற்கில்லை என்றும் தனலெட்சுமி கூறியுள்ளார். இதனால் தனலெட்சுமிக்கும் அம்மாவுக்குமிடையே என்ன பிரச்னை என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.