ஆஸ்கர் லைப்ரரியில் இடம்பிடித்த தமிழர் படம் | பிளாஷ்பேக் : காரில் பயணம் செய்யாத நடிகை | பிளாஷ்பேக் : காப்பி மேல் காப்பி அடிக்கப்பட்ட படம் | கதாநாயகனாகத் தொடரும் சூரி, இடைவெளி விடும் சந்தானம்.. | நான் பெண்ணாக பிறந்திருந்தால் கமலை திருமணம் செய்திருப்பேன் : சிவராஜ்குமார் | ஜிங்குச்சா - கமல்ஹாசன், சிலம்பரசன் நடனத்தில்… முதல்பாடல் நாளை வெளியீடு | 100 கோடி ரூபாய் வீட்டிற்குக் குடிப்போகும் தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் | எனக்கு என்ன ஆச்சு ? நஸ்ரியா தன்னிலை விளக்கம் | பிரபாஸ் படப்பிடிப்பில் மிதுன் சக்கரவர்த்திக்கு ஏற்பட்ட கைமுறிவு | கொச்சியில் புது வீடு கட்டினார் நிமிஷா சஜயன் |
டிக்-டாக் பிரபலமான தனலெட்சுமி பிக்பாஸ் நிகழ்ச்சியில் எண்ட்ரி கொடுத்து கடைசி வரை தாக்குப்பிடித்தார். ஆரம்பத்தில் தனலெட்சுமியை பலரும் வெறுத்து ஒதுக்கினாலும், அவர் வெளியேறிய சமயத்தில் பல லட்சக்கணக்கான ரசிகர்களின் மனதை கவர்ந்திருந்தார். இதனையடுத்து தனலெட்சுமிக்கு பட வாய்ப்புகள் கிடைக்குமென பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், தற்போது வரை அவருக்கு வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் தனலெட்சுமி அண்மையில் வெளியிட்டுள்ள பதிவால் ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர். அதில், தனலெட்சுமியின் அம்மா, அவரது பெயரையோ புகைப்படத்தையோ தனலெட்சுமி எங்கேயும் பயன்படுத்தக் கூடாது என்றும், தனலெட்சுமிக்கும் தனக்கும் எந்தவித சம்மந்தமும் கிடையாது என்றும் நோட்டீஸ் அனுப்பியுள்ளதை குறிப்பிட்டுள்ளார். மேலும் இதுகுறித்து தற்போது எதுவும் சொல்வதற்கில்லை என்றும் தனலெட்சுமி கூறியுள்ளார். இதனால் தனலெட்சுமிக்கும் அம்மாவுக்குமிடையே என்ன பிரச்னை என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.