மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
நாதஸ்வரம் சீரியலில் பாண்டி கதாபாத்திரத்தின் மூலம் அறிமுகமாகி பிரபலமானவர் நடிகர் பாண்டி கமல். அதன்பின் பல தொடர்களில் இவர் நடித்திருந்தாலும் நாதஸ்வரம் சீரியல் தான் இவருக்கான அங்கீகாரத்தை கொடுத்தது. பாண்டி கமல் தற்போது பூவா தலையா தொடரில் நடித்து வருகிறார். இந்நிலையில், அவர் தன்னை அறிமுகப்படுத்திய திருமுருகன் குறித்து நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.
பாண்டி கமல் பேசியபோது, ‛‛நாதஸ்வரம் சீரியல் மூலமாகத்தான் நான் இன்று நல்ல நிலையில் இருக்கிறேன். என்னுடைய மகள் பிறந்தநாள் விழாவுக்கு திருமுருகன் சாரை அழைக்க சென்றிருந்தேன். ஆனால், அவர் ஸ்கிரிப்ட் எழுதும் பணியில் பிசியாக இருந்தார். அவரை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று மேனேஜரிடம் மட்டும் சொல்லிவிட்டு வந்துவிட்டேன். ஆனால், என் மகள் பிறந்தநாள் விழாவுக்கு அழைக்காமலேயே திருமுருகன் சார் முதல் ஆளாக வந்து தங்க கம்மலை பரிசாக கொடுத்தார்'' என்று நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.