இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

குக் வித் கோமாளி சீசன் 5 தொடங்கும் முன்னே செப் வெங்கடேஷ் பட் அதிலிருந்து வெளியேறினார். அவரை தொடர்ந்து இயக்குநர், தயாரிப்பாளர் என பலரும் விலக முற்றிலும் புதிய குழுவுடன் சீசன் 5 ஆரம்பமானது. இந்நிலையில் கோமாளியாக வந்த நாஞ்சில் விஜயன், குக் வித் கோமாளி சீசன் 5லிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'எனக்கும் விஜய் டிவிக்கும் எந்த பிரச்னையும் இல்லை. பாக்ஸ் ஆபிஸ் நிறுவனம் தயாரிக்கும் எந்த நிகழ்ச்சியிலும் நான் இனி கலந்து கொள்ளமாட்டேன்' என கூறியுள்ளார்.
இதுபோல் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலருக்கும் பாக்ஸ் ஆபிஸ் நிறுவனத்துடன் மன வருத்தம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. ஏற்கனவே குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு எதிராக டாப்பு குக்கு டூப்பு குக்கு தொடங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள சலசலப்பால் குக் வித் கோமாளி சீசன் 5 முந்தைய சீசன்களை போல வெற்றி பெறுமா? என ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர்.