தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
குக் வித் கோமாளி சீசன் 5 தொடங்கும் முன்னே செப் வெங்கடேஷ் பட் அதிலிருந்து வெளியேறினார். அவரை தொடர்ந்து இயக்குநர், தயாரிப்பாளர் என பலரும் விலக முற்றிலும் புதிய குழுவுடன் சீசன் 5 ஆரம்பமானது. இந்நிலையில் கோமாளியாக வந்த நாஞ்சில் விஜயன், குக் வித் கோமாளி சீசன் 5லிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'எனக்கும் விஜய் டிவிக்கும் எந்த பிரச்னையும் இல்லை. பாக்ஸ் ஆபிஸ் நிறுவனம் தயாரிக்கும் எந்த நிகழ்ச்சியிலும் நான் இனி கலந்து கொள்ளமாட்டேன்' என கூறியுள்ளார்.
இதுபோல் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலருக்கும் பாக்ஸ் ஆபிஸ் நிறுவனத்துடன் மன வருத்தம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. ஏற்கனவே குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு எதிராக டாப்பு குக்கு டூப்பு குக்கு தொடங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள சலசலப்பால் குக் வித் கோமாளி சீசன் 5 முந்தைய சீசன்களை போல வெற்றி பெறுமா? என ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர்.