இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சின்னத்திரை நடிகை பிரியங்கா நல்காரி தனது காதலர் ராகுலை அவசர அவசரமாக திருமணம் முடித்தார். திருமணம் முடித்த கையோடு கணவருக்காக நடிப்பதை இனி கைவிடுவதாக சீரியலை விட்டு வெளியேறினார். ஆனால், சில நாட்களிலேயே கணவருடன் எடுத்த புகைப்படங்களை டெலிட் செய்தார். அதன்பிறகு திடீரென நளதமயந்தி என்கிற புதிய தொடரில் மீண்டும் ஹீரோயினாக கமிட்டானார். அப்போது ஒரு முறை ரசிகர்ககளின் கேள்விக்கு பதிலளித்த ப்ரியங்கா நான் சிங்கிளாக இருப்பதாக தெரிவித்தார். இதன்மூலம் ராகுலை விட்டு ப்ரியங்கா பிரிந்துவிட்டதாக அனைவரும் நினைத்தனர். இந்நிலையில், ப்ரியங்கா தனது பிறந்தநாளை கணவர் ராகுலுடன் சேர்ந்து கொண்டாடி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் தனது கணவர் குறித்து உருக்கமான ஹாஸ்டேக்குகளையும் சேர்த்து பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் மீண்டும் ராகுலுடன் ப்ரியங்கா இணைந்துவிட்டாரா? என அதிர்ச்சியுடன் கேட்டு வருகின்றனர். மேலும், இந்த பிறந்தநாளுக்கு பிறகாவது இருவரும் சண்டையில்லாமல் ஒற்றுமையாக வாழ வேண்டும் எனவும் அட்வைஸ் செய்து வாழ்த்தி வருகின்றனர்.