நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் பாலா. சமீப காலமாக திரைப்படங்களிலும் பிஸியாக நடித்து வரும் பாலா, இன்னொரு பக்கம் சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக, ஏழை குழந்தைகளை படிக்க வைப்பது, முதியோர் இல்லங்களுக்கு உதவுவது, மலைக்கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வசதி செய்து கொடுப்பது என்று பலதரப்பட்ட உதவிகளை செய்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், மருத்துவமனை கட்டி அதில் ஏழை மக்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதுதான் எனது நீண்ட நாள் கனவு என்று கூறி இருக்கிறார் பாலா. அதோடு, நான் படிக்க வைக்கும் ஒரு மாணவன் தற்போது இன்ஜினியரிங் படித்து வருகிறார். அவர் அடுத்த ஆண்டு படித்து முடித்ததும் மருத்துவமனை கட்டுவதற்கான பணிகளில் ஈடுபடுவேன். குறிப்பாக இதயம் சம்பந்தமான நோய்களுக்கு சிகிச்சை அளிக்க இந்த மருத்துவமனையை தான் கட்டப் போவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.