அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
சின்னத்திரை நடிகை பாவ்னி ரெட்டி முதல் கணவரை இழந்த சோகத்திலிருந்து பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மீண்டு அதன்பின் புது வாழ்வை தொடங்கியிருக்கிறார். பிக்பாஸ் ஹவுஸ்மேட்டான அமீரின் காதலை ஏற்றுக்கொண்ட பாவ்னி அவருடன் தற்போது லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அண்மையில் அவர் அளித்துள்ள பேட்டியில், 'எனக்கு ஒருவரை பிடித்துவிட்டது என்றால் அவர்களுக்காக எதையும் செய்யக்கூடியவள். அவர்கள் மட்டும் தான் என்னுடைய உலகம் என்று வாழ்ந்து கொண்டிருப்பேன். அப்படிப்பட்டவர்கள் என்னுடைய வாழ்க்கையில் இல்லாமல் போய்விட்டால் நான் எவ்வளவு வேதனை பட்டிருப்பேன். ஆனால், சிலர் அதை அசால்ட்டாக கேவலப்படுத்தி கமெண்ட் போடுகிறார்கள். நானே என் கணவரை கொன்றுவிட்டதாக சொல்கிறார்கள். அதுபோல இப்போது அமீரை எப்போது கொல்ல போகிறாய்? என்று கேட்கிறார்கள்' என வேதனையுடன் பேசியுள்ளார்.