ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ரோஜா தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் பேவரைட் ஹீரோயினாக வலம் வந்தார் நடிகை பிரியங்கா நல்காரி. தொடர்ந்து ஜீ தமிழில் சீதா ராமன் சீரியலில் என்ட்ரி கொடுத்த அவர் திடீரென காதலர் ராகுல் வர்மாவை திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு கணவருக்கு நடிப்பது பிடிக்கவில்லை, அதனால் விலகுகிறேன் என்பது போல் அறிவித்துவிட்டு சீரியலிலிருந்து வெளியேறினார். இதனால் அவரது ரசிகர்கள் சோகமடைந்தனர். ஆனால், தற்போது ஆந்திரா மாநிலத்தின் கிராமத்து பெண் போல் கெட்டப் போட்டு போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ள பிரியங்கா, 'ரோஸ் இஸ் பேக்', 'ரீ-என்ட்ரி இன் தெலுங்கு' என சில ஹேஷ்டேக்குகளையும் தனது பதிவுகளில் குறிப்பிட்டுள்ளார். இதனால், அவர் மீண்டும் தெலுங்கு சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார் என ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.