சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

ரோஜா தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் பேவரைட் ஹீரோயினாக வலம் வந்தார் நடிகை பிரியங்கா நல்காரி. தொடர்ந்து ஜீ தமிழில் சீதா ராமன் சீரியலில் என்ட்ரி கொடுத்த அவர் திடீரென காதலர் ராகுல் வர்மாவை திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு கணவருக்கு நடிப்பது பிடிக்கவில்லை, அதனால் விலகுகிறேன் என்பது போல் அறிவித்துவிட்டு சீரியலிலிருந்து வெளியேறினார். இதனால் அவரது ரசிகர்கள் சோகமடைந்தனர். ஆனால், தற்போது ஆந்திரா மாநிலத்தின் கிராமத்து பெண் போல் கெட்டப் போட்டு போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ள பிரியங்கா, 'ரோஸ் இஸ் பேக்', 'ரீ-என்ட்ரி இன் தெலுங்கு' என சில ஹேஷ்டேக்குகளையும் தனது பதிவுகளில் குறிப்பிட்டுள்ளார். இதனால், அவர் மீண்டும் தெலுங்கு சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார் என ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.