விஜயுடன் இணைய தயார்: ‛புலி' பட தயாரிப்பாளர் அறிவிப்பு | உண்மை சம்பவம் பின்னணியில் உருவான ‛ரோஜா மல்லி கனகாம்பரம்' | ‛போலீஸ் ஸ்டேஷன் மெயின் பூத்': ரம்யா கிருஷ்ணனின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராஷ்மிகாவின் ‛மைசா' படப்பிடிப்பு கேரளா அதிரப்பள்ளி காட்டுப் பகுதியில் தொடங்கியது! | அஜித் 64வது படம் : பிளானை மாற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்! | தன்னுடைய பெயரில் ரசிகர் நடத்தும் ஹோட்டலுக்கு அனுமதி அளித்த சிரஞ்சீவி | பஸ் விபத்து எதிரொலி ; மீனாட்சி சவுத்ரி போஸ்டர் வெளியீட்டை தள்ளிவைத்த நாக சைதன்யா படக்குழு | சீனியர் நடிகர் மதுவை நேரில் சென்று சந்தித்த மம்முட்டி | காந்தாராவை பணத்திற்காக எடுக்கவில்லை: ரிஷப் ஷெட்டி | 2030லாவது மகாபாரதத்தை ஆரம்பிப்பீர்களா ? ராஜமவுலிக்கு மகேஷ்பாபு கேள்வி |

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020 ஆம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டம் நாசரேத்பேட்டையில் உள்ள ஹோட்டல் அறையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பில் வழக்கு தொடரப்பட்டு சித்ராவின் கணவர் ஹேம்நாத் உட்பட சிலரிடம் கடந்த 3 வருடங்களாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சித்ராவின் தந்தை காமராஜ் இந்த வழக்கு விசாரணையை திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்திலிருந்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றி விசாரணையை விரைவில் முடிக்க வேண்டும் என மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த வெங்கடேஷ், வழக்கை சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்ற விடுக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்தார். அதேசமயம் வழக்கின் விசாராணையை ஆறுமாதங்களில் முடிக்க வேண்டும் என திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.