லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்றவர்கள் அமீர் மற்றும் பாவனி. இவர்கள் இருவரும் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்தபோது காதலித்தார்கள். இதை பாவனி மறுத்து வந்த போதும் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு அவரும் காதலை உறுதிப்படுத்தினார். இதன் காரணமாக அவர்கள் இருவரும் எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று கேள்விகள் எழுந்து வருகின்றன. ஆனால் இந்த நேரத்தில் தன்னுடைய சோசியல் மீடியாவில், நான் சிங்கிள் தான் என்று பாவனி ஒரு பதிவு வெளியிட்டு இருந்தார்.
அதன் காரணமாக அமீரும், பாவனியும் பிரேக் அப் செய்து கொண்டதாக சோசியல் மீடியாவில் ஒரு செய்தி தீயாகப் பரவியது. இந்நிலையில் அவர்கள் இருவரும் அதுகுறித்து மீடியாக்களிடத்தில் ஒரு விளக்கம் அளித்துள்ளார்கள். அதில், எங்களை பற்றி வெளியாகி வரும் பிரேக்கப் செய்தி உண்மை இல்லை. யாரோ வேண்டுமென்றே இப்படி ஒரு வதந்தியை பரப்பி விட்டுள்ளார்கள். என்று அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்கள்.