மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்றவர்கள் அமீர் மற்றும் பாவனி. இவர்கள் இருவரும் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்தபோது காதலித்தார்கள். இதை பாவனி மறுத்து வந்த போதும் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு அவரும் காதலை உறுதிப்படுத்தினார். இதன் காரணமாக அவர்கள் இருவரும் எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று கேள்விகள் எழுந்து வருகின்றன. ஆனால் இந்த நேரத்தில் தன்னுடைய சோசியல் மீடியாவில், நான் சிங்கிள் தான் என்று பாவனி ஒரு பதிவு வெளியிட்டு இருந்தார்.
அதன் காரணமாக அமீரும், பாவனியும் பிரேக் அப் செய்து கொண்டதாக சோசியல் மீடியாவில் ஒரு செய்தி தீயாகப் பரவியது. இந்நிலையில் அவர்கள் இருவரும் அதுகுறித்து மீடியாக்களிடத்தில் ஒரு விளக்கம் அளித்துள்ளார்கள். அதில், எங்களை பற்றி வெளியாகி வரும் பிரேக்கப் செய்தி உண்மை இல்லை. யாரோ வேண்டுமென்றே இப்படி ஒரு வதந்தியை பரப்பி விட்டுள்ளார்கள். என்று அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்கள்.