பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

பிரவீன் இயக்கத்தில் விஷ்ணுவிஷால், செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்த 'ஆர்யன்' படம், அக்டோபர் 31ல் ரிலீஸ். இந்த படத்தில் வில்லனாக நடிக்க இந்தி நடிகர் அமீர்கான் விரும்பி நிலையில், கடைசியில் அவர் நடிக்க மறுத்துவிட்டார். இது குறித்து விஷ்ணு விஷால் கூறியது. ''நான் பல போலீஸ் கதைகளில் நடித்து இருந்தாலும் ஆர்யன் அதிலிருந்து மாறுபட்ட கதை. ராட்சசன் மாதிரியும் இருக்காது. இதில் வில்லன் கேரக்டர் பவர்புல். தமிழில் அந்த வில்லன் கேரக்டரில் இயக்குனர் செல்வராகவன் நடித்து இருக்கிறார்.
இந்த படத்தை ஹிந்தியில் உருவாக்க நினைத்தோம். அதில் அமீர்கான் நடிக்க ஆர்வமாக இருந்தார். இரவு 10 மணி முதல் அதிகாலை வரை படம் குறித்தும், அந்த கேரக்டர் குறித்தும் விவாதித்தோம். ஆனால், ஒரு சில மாறல் விஷயங்கள் அவர் இமேஜ்க்கு செட் ஆகவில்லை. அந்த விஷயங்களை நீக்க முடியுமா என்று அவர் கேட்டார். கதையில் முக்கியமே அந்த விஷயங்கள்தான், அதை மாற்ற முடியாது என்று நாங்கள் சொன்னோம். அதனால், அமீர்கானால் நடிக்க முடியவில்லை.
பாராட்டு இல்லை
நான் சினிமாவுக்கு வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. ஏகப்பட்ட படங்களில் நடித்துவிட்டேன். தமிழில் நல்ல படங்கள் வந்தால் சம்பந்தப்பட்ட இயக்குனரை, படக்குழுவை அழைத்து பாராட்டுகிறேன். ஆனால், ஏனோ எனக்கு பாராட்டு கிடைப்பது இல்லை. என் படங்கள் ஹிட்டாகும்போது அந்த பட இயக்குனரை அழைத்து பேசுகிறார்கள், பாராட்டுகிறார்கள், என்னை மட்டும் மறந்துவிடுகிறார்கள்.
ஆர்யன் என்பது என் மகன் பெயர். அவன் பெயரில் இந்த படத்தை தயாரிக்கிறேன். ஆகவே, இந்த பட விழாவுக்கு அவனை போலீஸ் உடையில் அழைத்து வந்தேன். அவன் என்னை கை விலங்கு இட்டு அழைத்து வந்து, மேடையில் பேசினான். என் அப்பா ரமேஷ்குடவாலா முன்னாள் போலீஸ் அதிகாரி'' என்றார் விஷ்ணுவிஷால்.