ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் உலக அளவில் பலநாட்டிலும் இருக்கும் தமிழர்களால் பார்க்கப்படுகிறது. எனவே, ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் உலக நாடுகளில் இருக்கும் தமிழர்களையும் கலந்துகொள்ள செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சரிகமப நிகழ்ச்சியில் இலங்கையிலிருந்து அசானி என்ற பெண் கலந்து கொள்கிறார். அசானியின் குடும்பம் இலங்கையில் கூலி தொழில் செய்து வருகின்றனர். சிறுமி அசானி ரேடியோவில் போடும் பாடலை கேட்டு கேள்வி ஞானத்திலேயே அருமையாக பாடி வருகிறார்.
இந்நிலையில், ஜீ தமிழ் சரிகமப நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆசைப்பட்ட அவருக்கு மெகா ஆடிஷனில் கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டது. காரணம் தமிழ்நாட்டிற்கு அவர் வருவதென்றால் 1.5லட்சம் செலவு செய்ய வேண்டும். ஆனால், அசானியின் குடும்பத்தினரிடம் அவ்வளவு தொகை கிடையாது. இதனையறிந்த ஊர்மக்கள் அனைவரும் சிறுமி அசானிக்காக தங்கள் சேமிப்பு பணத்தை கொடுத்து அசானியையும் அவரது தந்தையும் டிக்கெட் போட்டு அனுப்பி வைத்துள்ளனர்.
சிறுமி அசானியின் பாடல் பாடும் திறமையை ஏற்கனவே அறிந்திருந்த நடுவர்களும், மெகா ஆடிஷனில் கலந்து கொள்ளாவிட்டாலும் அவருக்காக சிறப்பு வாய்ப்பை வழங்கியுள்ளனர். அந்த மேடையில் 'ராசாவே உன்னை நம்பி' பாடலை அழகாக பாடிய அசானிக்கு தற்போது உலகெங்கிலும் பலரும் ரசிகர்களாகிவிட்டனர். சிறுமி அசானிக்காக பெரும் உதவியை செய்த ஊர்க்காரர்களின் நல்ல உள்ளங்களுக்காவது அசானி தொடர்ந்து ஜெயிக்க வேண்டும் என பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.