கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் | மீரா ஜாஸ்மின் பெயர் என் காதுகளில் ஒலிக்காத நாளே இல்லை ; சிலாகித்த நயன்தாரா | கேரள முதல்வரின் சொந்த ஊர் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் | கிடப்பில் இருக்கும் பிரபுதேவா படத்தை வெளியிட முயற்சி |
சின்னத்திரை பிரபலமான ரேகா நாயர், இரவின் நிழல் படத்தில் நிர்வாண காட்சியில் நடித்ததன் மூலம் வைரலானார். தொடர்ந்து பயில்வான் ரங்கநாதனுடன் பிரச்னை, வீஜே சித்ரா விவகாரம், நிர்வாணம் பற்றிய கருத்து என இவரை சுற்றி சர்ச்சைகள் எழுந்து அடிக்கடி டிரெண்டிங்கில் இடம்பிடித்து வருகிறார்.
இந்நிலையில், அண்மையில் பேட்டி ஒன்றில் தனது கடந்தகால சோக வாழ்க்கை குறித்து பேசியுள்ள ரேகா, ‛‛எனக்கு 17 வயதிலேயே திருமணமாகிவிட்டது. 18 வயதில் எனக்கு மகள் பிறந்தாள். அப்போதே என் கணவர் என்னை விட்டு பிரிந்துவிட்டார். இப்போது எனக்கு 37 வயதாகிறது. 2 வருடங்களுக்கு முன்பு தான் இரண்டாவது திருமணம் செய்துகொண்டேன். இந்த 20 வருடத்தில் பல பெரிய மாற்றங்களை என்னிடம் பார்க்கிறேன். வீடு வாங்கிவிட்டேன், 2 கார்கள் வைத்திருக்கிறேன். முடியாது என்பது இந்த உலகத்தில் இல்லை'' என தன் வாழ்க்கை குறித்து பேசியுள்ளார். இவ்வளவு கஷ்டத்திலும் துணிச்சலுடன் எதிர்நீச்சல் போட்டு சாதித்த ரேகா நாயருக்கு பலரும் தற்போது வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.