படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட ஜெனிபர் | ஜுனியர் என்டிஆருக்கு வாழ்த்து சொன்ன பவன் கல்யாண் | தெலுங்கு பட ஷூட்டிங்கில் ரச்சிதா மகாலெட்சுமி | 'சத்யா' காட்சியைப் பகிர்ந்து கவியூர் பொன்னம்மாவுக்கு கமல்ஹாசன் இரங்கல் | சுதா சந்திரன் பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் குழுவினர் | சீக்கிரமே அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிடுவேன் - ராஜலெட்சுமி பேட்டி | 160 படங்களைக் கடந்த 2024 ரிலீஸ், 6 படங்கள் மட்டுமே 100 கோடி வசூல் | வித்தியாசமா கூவுறாங்க! மணிமேகலை வெளியிட்ட நறுக் வீடியோ | சீரியலிலும் அட்ஜெஸ்ட்மென்ட் இருக்கு - நிமிஷிகா பளீச் பேட்டி | சிம்பு நடிக்க இருந்த படத்தில் ரஜினியா? |
சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி தான் எடுத்துக் கொண்ட கதாபாத்திரத்தில் தத்ரூபமாக நடித்து பாராட்டுகளை பெற்று வருகிறார். அதற்காக எந்த ரிஸ்கையும் எடுக்கத் தயராக இருக்கும் சைத்ரா, முன்னதாக யாரடி நீ மோகினி தொடரிலும் பேயுடன் சண்டையிடும் காட்சிக்காக கயிற்றில் தொங்கிய படி ரிஸ்க்கான சண்டை காட்சியை சைத்ரா செய்திருந்தார். தற்போது கயல் தொடரின் காட்சிக்காக உண்மையாகவே சைத்ரா ரெட்டி நாள் முழுவதும் கழுத்தில் சுருக்கு கயிறுடன் ஐஸ்கட்டி மீது நின்று நடித்துக் கொடுத்துள்ளார். 2 நிமிடம் ஐஸ்கட்டி தொடர்ந்து கையில் பட்டாலே நம்மில் பலரால் தாங்க முடியாது. ரத்த ஓட்டம் நின்றுவிடும். ஆனால், ஷூட்டிங்கிறாக தொடர்ந்து ஐஸ்கட்டி மேல் நின்று சைத்ரா ரிஸ்க் எடுத்துள்ளார். இந்த காட்சியின் மேக்கிங் வீடியோவானது தற்போது வைரலாகி வரும் நிலையில் பலரும் நடிப்பின் மீதான சைத்ராவின் அர்ப்பணிப்பை பாராட்டி வருகின்றனர்.