இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சின்னத்திரை நடிகை மீனா வெமூரி. பல சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஈரமான ரோஜாவே 2, இலக்கியா ஆகிய தொடர்களில் ஹீரோயின்களுக்கு அத்தையாக பல கொடுமைகளை செய்து நேயர்களிடம் திட்டையும் வாங்கி வருகிறார். அவர் அண்மையில் அளித்துள்ள பேட்டியில், 'சீரியல் மூலம் எனக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஆனால், நிறைய பேர் என்னை திட்டுகிறார்கள். காரணம் என்னுடைய கதாபாத்திரம் தான். மீடியாவிற்கு வந்து 8 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுவரை யாரும் என்னிடம் அட்ஜெஸ்மெண்ட் கேட்டதில்லை. போனில் மட்டும் சில அழைப்புகள் வரும். அவர்கள் ஆரம்பிக்கும் போதே நான் முடியாது என்று சொல்லிவிடுவேன். ஆனால், காலை 7 மணிக்கு ஷூட்டிங் சென்றால் இரவு வரை உட்கார வைத்து 8 மணிக்கு ஒரு ஷாட் எடுப்பார்கள். அப்போதும் அனுப்பமாட்டார்கள். இரவு 9 மணிக்கு தான் அனுப்புவார்கள். அது ஒன்று தான் கஷ்டமாக இருக்கும். அவர்களை குற்றம் சொல்ல முடியாது. எப்போது ஷூட்டிங் முடியும் என்று அவர்களுக்கே தெரியாது. ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தாலும், ஷூட்டிங் போக போக பழகிவிட்டது' என்று கூறியுள்ளார்.