புஷ்பா 2 படத்தில் டேவிட் வார்னர்? | கலகலப்பு 3ம் பாகத்தில் மீண்டும் விமல்? | லப்பர் பந்து இயக்குனரின் அடுத்த படத்தை தயாரிக்கும் தனுஷ் பட தயாரிப்பாளர்! | மெய்யழகன் படத்துடன் இணைந்த சர்தார் 2! | நேருக்கு நேர் மோதும் அஜித், சூர்யா படங்கள்! | படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட ஜெனிபர் | ஜுனியர் என்டிஆருக்கு வாழ்த்து சொன்ன பவன் கல்யாண் | தெலுங்கு பட ஷூட்டிங்கில் ரச்சிதா மகாலெட்சுமி | 'சத்யா' காட்சியைப் பகிர்ந்து கவியூர் பொன்னம்மாவுக்கு கமல்ஹாசன் இரங்கல் | சுதா சந்திரன் பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் குழுவினர் |
சின்னத்திரை நடிகை மீனா வெமூரி. பல சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஈரமான ரோஜாவே 2, இலக்கியா ஆகிய தொடர்களில் ஹீரோயின்களுக்கு அத்தையாக பல கொடுமைகளை செய்து நேயர்களிடம் திட்டையும் வாங்கி வருகிறார். அவர் அண்மையில் அளித்துள்ள பேட்டியில், 'சீரியல் மூலம் எனக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஆனால், நிறைய பேர் என்னை திட்டுகிறார்கள். காரணம் என்னுடைய கதாபாத்திரம் தான். மீடியாவிற்கு வந்து 8 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுவரை யாரும் என்னிடம் அட்ஜெஸ்மெண்ட் கேட்டதில்லை. போனில் மட்டும் சில அழைப்புகள் வரும். அவர்கள் ஆரம்பிக்கும் போதே நான் முடியாது என்று சொல்லிவிடுவேன். ஆனால், காலை 7 மணிக்கு ஷூட்டிங் சென்றால் இரவு வரை உட்கார வைத்து 8 மணிக்கு ஒரு ஷாட் எடுப்பார்கள். அப்போதும் அனுப்பமாட்டார்கள். இரவு 9 மணிக்கு தான் அனுப்புவார்கள். அது ஒன்று தான் கஷ்டமாக இருக்கும். அவர்களை குற்றம் சொல்ல முடியாது. எப்போது ஷூட்டிங் முடியும் என்று அவர்களுக்கே தெரியாது. ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தாலும், ஷூட்டிங் போக போக பழகிவிட்டது' என்று கூறியுள்ளார்.