25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
சின்னத்திரை நடிகையான நக்ஷத்திரா 'யாரடி நீ மோகினி', 'வள்ளித் திருமணம்' ஆகிய சீரியல்களின் மூலம் பிரபலமானார். கடந்த வருடம் ஜூலை மாதத்தில் காதலர் விஸ்வாவை கரம்பிடித்த நக்ஷத்திராவின் திருமணம் மிகவும் எளிமையான முறையில் நடந்து முடிந்தது. அடுத்த சில மாதங்களிலேயே கருவுற்ற நக்ஷத்திராவுக்கு அண்மையில் தான் வளைகாப்பு நிகழ்வும் கோலாகலமாக நடந்தது. இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இந்த மகிழ்ச்சியான செய்தியை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள நக்ஷத்திரா குழந்தையின் பிஞ்சு விரல்களின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதனை பார்க்கும் பலரும் தங்களது மனமார்ந்த வாழ்த்துகளை நக்ஷத்திராவுக்கு தெரிவித்து வருகின்றனர்.