மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
சின்னத்திரை நடிகையான ஷாலினி இரண்டாவது கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றதை போட்டோஷூட் வெளியிட்டு கொண்டாடினார். இதுகுறித்து பல சர்ச்சைகள் கிளம்பிய நிலையில் அண்மையில் அளித்த பேட்டியில் ஷாலினி விளக்கமளித்துள்ளார். ஷாலினியின் முதல் திருமணத்தில் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்படவே ஒரே மாதத்தில் பிரிந்துவிட்டார். அதன்பின் ரியாஸுடன் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாற இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், திருமணத்திற்கு பின் ரியாஸ் தனது சுயரூபத்தை காட்டியிருக்கிறார்.
இரண்டாவது திருமணமும் தோல்வியில் முடிவடையக்கூடாது என்று நினைத்த ஷாலினி குழந்தை பிறந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று சிகிச்சை எடுத்து வந்திருக்கிறார். அப்போது மது அருந்த சொல்லி கட்டாயப்படுத்துவாராம் ரியாஸ். அப்படி ஒருநாள் மது அருந்திவிட்டு ஷாலினி தூங்கிவிட, ஷாலினி மேல் தண்ணி ஊற்றி எழுப்பி அடித்திருக்கிறார். அதில் ஷாலினிக்கு தலையில் அடிப்பட்டு ரத்தம் வர அதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து அடித்து துன்புறுத்தினாராம் ரியாஸ். இந்த காரணத்திற்காக தான் ரியாஸ் உடன் விவாகரத்து கிடைக்கப்பெற்ற போது அதை கொண்டாடியதாக ஷாலினி கூறியுள்ளார்.
சின்னத்திரையில் முள்ளும் மலரும் சீரியலின் மூலம் நடிகையாக அறிமுகமான ஷாலினி, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் மாம் நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.