ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? | தோத்துகிட்டேபோனா எப்படி : எப்பதான் ஜெயிக்கிறது | தாத்தா பெயரை காப்பாற்றுவேன்: நாகேஷ் பேரன் உருக்கம் | எனது முத்தக் காட்சியை எப்படி நீக்கலாம் : பாலிவுட் நடிகை கண்டனம் | ரஞ்சித், ஆர்யா படப்பிடிப்பில் சண்டை கலைஞர் மரணம் | ஆள் வச்சி அடிச்ச மாதிரி டார்ச்சர் இருந்தது: 'தலைவன் தலைவி' படப்பிடிப்பு அனுபவம் குறித்து விஜய் சேதுபதி |
சின்னத்திரை நடிகையான ஷாலினி இரண்டாவது கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றதை போட்டோஷூட் வெளியிட்டு கொண்டாடினார். இதுகுறித்து பல சர்ச்சைகள் கிளம்பிய நிலையில் அண்மையில் அளித்த பேட்டியில் ஷாலினி விளக்கமளித்துள்ளார். ஷாலினியின் முதல் திருமணத்தில் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்படவே ஒரே மாதத்தில் பிரிந்துவிட்டார். அதன்பின் ரியாஸுடன் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாற இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், திருமணத்திற்கு பின் ரியாஸ் தனது சுயரூபத்தை காட்டியிருக்கிறார்.
இரண்டாவது திருமணமும் தோல்வியில் முடிவடையக்கூடாது என்று நினைத்த ஷாலினி குழந்தை பிறந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று சிகிச்சை எடுத்து வந்திருக்கிறார். அப்போது மது அருந்த சொல்லி கட்டாயப்படுத்துவாராம் ரியாஸ். அப்படி ஒருநாள் மது அருந்திவிட்டு ஷாலினி தூங்கிவிட, ஷாலினி மேல் தண்ணி ஊற்றி எழுப்பி அடித்திருக்கிறார். அதில் ஷாலினிக்கு தலையில் அடிப்பட்டு ரத்தம் வர அதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து அடித்து துன்புறுத்தினாராம் ரியாஸ். இந்த காரணத்திற்காக தான் ரியாஸ் உடன் விவாகரத்து கிடைக்கப்பெற்ற போது அதை கொண்டாடியதாக ஷாலினி கூறியுள்ளார்.
சின்னத்திரையில் முள்ளும் மலரும் சீரியலின் மூலம் நடிகையாக அறிமுகமான ஷாலினி, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் மாம் நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.