டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா |
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் லாவண்யா. மாடலிங்கில் இருந்த லாவண்யா, விஜய் டிவியின் 'சிப்பிக்குள் முத்து' தொடரின் மூலம் நடிக்க வந்தார். அந்த தொடருக்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லாததால் சீக்கிரமே நிறைவுற்றது. இந்நிலையில், அடுத்த வாய்ப்பிற்காக காத்திருந்த அவருக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஏற்கனவே, வீஜே சித்ரா, காவ்யா அறிவுமணி என இரண்டு நடிகைகள் நடித்திருப்பதால் முல்லை கதாபாத்திரம் லாவண்யாவுக்கு செட்டாகாது என பலரும் நெகட்டிவாக பேசி வந்தனர். ஆனால், புதிய முல்லையாக லாவண்யா அந்த கதாபாத்திரத்தில் கட்சிதமாக செட்டாகி மக்களிடம் பிரபலமாகிவிட்டார்.
மேலும், அவர் தற்போது 'ரேசர்' என்கிற புதிய படத்திலும் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார். இந்நிலையில், அண்மையில் அவர் அளித்த பேட்டியில் லாவண்யாவின் குடும்பத்தினர் முதலில் லாவண்யாவை நடிக்க அனுமதிக்கவில்லை என்றும், இதனால் தற்கொலை முயற்சி செய்ததாகவும் கூறியுள்ளார். மேலும் அந்த பேட்டியில் சினிமாவில் நடிப்பதற்காக தான் சந்தித்த பிரச்னைகள் குறித்தும் அட்ஜெஸ்ட்மென்ட் டார்ச்சர்கள் குறித்தும் லாவண்யா மனம் திறந்து பேசியிருக்கிறார்.