300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
சென்னை, திருவான்மியூரில் உள்ள பிரபல நாட்டிய கல்லூரியான கலாஷேத்ரா கல்லூரியில் ஆசிரியைகள் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இதனை தொடர்ந்து மாணவிகள் பலர் அளித்த புகாரின் பேரில் உதவி பேராசிரியர் ஹரிபத்மன் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். தற்போது சோசியல் மீடியாவில் பூதாகரமாக வெடித்துள்ள இந்த சம்பவம் குறித்து பிக்பாஸ் போட்டியாளரான அபிராமி தனது கருத்தை கூறியுள்ளார். இவர் முன்னாள் கலாஷேத்ரா மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் அளித்த பேட்டியில், 'நானும் கலாஷேத்ராவின் முன்னாள் மாணவி தான். கலாஷேத்ராவின் ஆசிரியர் நிர்மலா என்னை தொடர்பு கொண்டு ஹரிபத்மனுக்கு எதிராக பேசுமாறு கூறினார். ஹரிபத்மனால் எனக்கு எந்த ஒரு தொந்தரவும் நிகழ்ந்தது இல்லை. ஹரிபத்மன் சிறந்த ஆசிரியர். ஒரு பக்கமாக நின்று பேசாமல் இருதரப்பையும் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் மாணவிகள் பலி ஆடுகளாக மாற்றப்படுகிறார்கள். கலாஷேத்ரா கலாசாரத்தின் அடையாளம். அதற்கு அவப்பெயர் வரும் போது அம்மாவை தவறாக பேசுவது போல் உள்ளது' என்று கூறியுள்ளார். அபிராமியின் இந்த கருத்தானது சோசியல் மீடியாக்களில் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.