ரீ-ரிலீஸாகும் ‛தேவர் மகன்' பட பணிகள் : சிறுவன் பேசிய ‛கட்டபொம்மன்' வசனத்தால் அசந்து போன கமல் | பிரபாஸின் 'ஸ்பிரிட்' படப்பிடிப்பு மேலும் 4 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது! | இளையராஜாவின் காப்புரிமை வழக்கு : சோனி நிறுவனம் வருமானம் தாக்கல்... அடுத்து ‛டியூட்' படத்திற்கும் சிக்கல் | அக்டோபர் 31ம் தேதி 'காந்தாரா சாப்டர்-1' படத்தின் ஆங்கில பதிப்பு வெளியாகிறது! | டியூட் விவாதங்களை உருவாக்கி உள்ளது, ஆனால்... : பிரதீப் ரங்கநாதன் | தீபாவளி கொண்டாடிய ரவி மோகன், ஜி.வி .பிரகாஷ், யோகி பாபு, பாடகி கெனிஷா! | காதல் தோல்வியால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்!- சொல்கிறார் ராஷ்மிகா | ஹீரோயின் இல்லாமல் தேங்கி நிற்கும் கவின் படம்! | ‛டாடா' இயக்குனருடன் கைகோர்க்கும் துருவ் விக்ரம் | கார்த்திக் சுப்பராஜ் அடுத்த படம் குறித்து அப்டேட் இதோ! |
பாரதி கண்ணம்மா தொடரின் மூலம் அதிகம் பிரபலமான ரோஷினி ஹரிப்ரியன் தமிழ் சினிமாவில் தனக்கு கிடைத்த சில பொன்னான வாய்ப்புகளை இழந்தார். அப்படியாக அவர் தவறவிட்ட வாய்ப்புகளில் ஒன்று தான் ஜெய்பீம் படத்தின் செங்கேணி கதாபாத்திரம். எனவே, தற்போது சீரியலைவிட்டு விலகி சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். வாய்ப்புகள் சரிவர கிடைக்காததால் இடையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் என்ட்ரி கொடுத்தார். அதன்பிறகு இன்ஸ்டாகிராமில் மட்டும் ஆக்டிவாக இருந்து வந்த ரோஷினி நீண்ட நாட்களுக்கு பிறகு 'நீ மட்டும்' என்கிற ஆல்பம் பாடலில் நடித்துள்ளார். கிருத்திகா நெல்சன் தயாரித்து, பாடி, இயக்கியுள்ள இந்த மெலோடி பாடலில் ரோஷினி கொள்ளை அழகுடன் காட்சியளிக்கிறார். ரோஷினிக்கு ஜோடியாக அர்ஜுன் சிதம்பரம் நடித்துள்ளார். டிரெண்டிங்கில் இடம்பிடித்துள்ள இந்த பாடலானது 1 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. இந்த பாடலின் வெற்றிக்கு பிறகு ரோஷினியின் சினிமா கனவும் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.