ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் | பேவரைட் ஆஸ்திரேலிய நடிகையுடன் புத்தாண்டை கொண்டாடிய நதியா | நான் ஹிந்தியில் படம் இயக்கினால் இவர்தான் ஹீரோ : வினோத் | மீண்டும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதா ? நடிகர் ஜெயசூர்யா மறுப்பு | பராசக்தி படத்தை வெளியிட தடையில்லை : நீதிமன்றம் உத்தரவு | பத்து நாள் ராஜாவாக சதீஷ் | சிறிய படங்களின் பிரச்னைகள் தீருமா? |

பாரதி கண்ணம்மா தொடரின் மூலம் அதிகம் பிரபலமான ரோஷினி ஹரிப்ரியன் தமிழ் சினிமாவில் தனக்கு கிடைத்த சில பொன்னான வாய்ப்புகளை இழந்தார். அப்படியாக அவர் தவறவிட்ட வாய்ப்புகளில் ஒன்று தான் ஜெய்பீம் படத்தின் செங்கேணி கதாபாத்திரம். எனவே, தற்போது சீரியலைவிட்டு விலகி சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். வாய்ப்புகள் சரிவர கிடைக்காததால் இடையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் என்ட்ரி கொடுத்தார். அதன்பிறகு இன்ஸ்டாகிராமில் மட்டும் ஆக்டிவாக இருந்து வந்த ரோஷினி நீண்ட நாட்களுக்கு பிறகு 'நீ மட்டும்' என்கிற ஆல்பம் பாடலில் நடித்துள்ளார். கிருத்திகா நெல்சன் தயாரித்து, பாடி, இயக்கியுள்ள இந்த மெலோடி பாடலில் ரோஷினி கொள்ளை அழகுடன் காட்சியளிக்கிறார். ரோஷினிக்கு ஜோடியாக அர்ஜுன் சிதம்பரம் நடித்துள்ளார். டிரெண்டிங்கில் இடம்பிடித்துள்ள இந்த பாடலானது 1 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. இந்த பாடலின் வெற்றிக்கு பிறகு ரோஷினியின் சினிமா கனவும் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.