மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
சின்னத்திரை நடிகை ஆல்யா மானசா சிறிய இடைவெளிக்கு பின் 'இனியா' என்ற சீரியல் மூலம் கம்பேக் கொடுத்தார். ஆல்யாவின் ரசிகர்களும் அவரது கம்பேக்கை நினைத்து மகிழ்ச்சியடைந்தனர். இந்நிலையில், சமீபத்தில் அவருக்கு ஏற்பட்ட விபத்தில் கால் எலும்பு முறிந்ததாகவும், தனக்காக பிரார்த்தனை செய்யுமாறும் இரு தினங்களுக்கு முன் மருத்துவமனையில் காலில் கட்டுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அதன்பின் மறுநாளே ஷூட்டிங் செல்வதாக பதிவிட்டிருந்தார்.
தற்போது அவர் மீண்டும் மருத்துவமனையில் நோயாளிகள் உடுப்பில் சஞ்சீவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு 'அறுவை சிகிச்சைக்கு ரெடியாகிவிட்டேன். கொஞ்சம் பயமா இருக்கு' என்று பதிவிட்டுள்ளார். மேலும், கணவர் சஞ்சீவை பற்றி பெருமையாக கூறி 'சஞ்சீவ் எனக்கு கடவுள் கொடுத்த பரிசு' என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
ஆல்யாவின் இந்த பதிவானது வைரலாகி வரும் நிலையில், அவர் பூரண குணமடைய வேண்டும் என பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். அதேசமயம், ஆல்யாவுக்கு அறுவை சிகிச்சை என்பதால் ஷூட்டிங்கில் அவர் தொடர்ந்து நடிப்பாரா? இல்லை 'இனியா' தொடரிலிருந்து விலகிவிடுவாரா? எனவும் சிலர் கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.