அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
பிக்பாஸ் சீசன் 6ல் அதிகம் கவனம் பெற்ற போட்டியாளர்களில் ஒருவர் சின்னத்திரை நடிகை ரச்சிதா மஹாலெட்சுமி. இறுதிப்போட்டிவரை நிச்சயமாக செல்வார் என அவரது ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், ரச்சிதா பிக்பாஸ் வீட்டிற்குள் சொல்லிக்கொள்ளும் வகையில் கேமை விளையாடவில்லை. அழகுபதுமையாக வெகேஷனுக்கு சென்றது போல் பிக்பாஸ் வீட்டில் சுற்றித்திரிந்து பலரும் விமர்சிக்கும் வகையில் நடந்து கொண்டார் என்பது பலரின் விமர்சனமாக இருந்தது. இறுதியில், கடந்தவார எவிக்ஷனில் வெளியேறினார்.
இந்நிலையில், வெளியே வந்துள்ள ரச்சிதாவுக்கு நண்பர்களும் ரசிகர்களும் சேர்ந்து ஏகபோக வரவேற்பை கொடுத்துள்ளனர். வீட்டிற்கு ரச்சிதா வருகையில் பட்டாசு வெடித்து, ஆரத்தி எடுத்து ஆளுயர ரோஜாப்பூமாலையும் அணிவித்து வரவேற்றுள்ளனர். பிக்பாஸ் வீட்டில் ரச்சிதா இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களால் அவரது வீட்டையும் அலங்கரித்து, மக்களின் ஸ்டார் என்ற பட்டத்தை கொடுத்து கேக் வெட்டியும் கொண்டாடியுள்ளனர். மேலும், ரச்சிதாவை பற்றி 'அவள் ஒரு சபிக்கப்பட்ட தேவதை' என்ற அழகிய கவிதையையும் பதிவிட்டுள்ளனர். இவையனைத்தும் அழகிய வீடியோவாக தொகுக்கப்பட்டு 'வா தலைவி வா' என பில்டப் சாங்குடன் வெளியாகி ரசிகர்களால் வைரல் செய்யப்பட்டு வருகிறது.
இதைபார்க்கும் சிலர் 'ரச்சிதா எப்படி என்ன சாதிச்சிட்டாங்கன்னு இவ்வளவு பில்டப்பு?' என கேட்டு வந்தாலும், ரசிகர்களோ ரச்சிதாவை கொண்டாடி வருகின்றனர்.