‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
விஜய் டிவி பிரபலமான ரித்திகா, அந்த தொலைக்காட்சியின் சூப்பர் ஹிட் சீரியலான 'பாக்கியலெட்சுமி' தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த தொடரில் ரித்திகாவின் நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பாரட்டுகள் கிடைத்து வருகிறது. ரித்திகாவிற்கு கடந்த நவம்பர் மாதம் திருமணம் நடந்து முடிந்த நிலையில், தற்போது ரித்திகாவும் அவரது கணவரும் ஜாலியாக மாலத்தீவுக்கு சென்று ஹனிமூனை எஞ்சாய் செய்து வருகின்றனர். இதுதொடர்பிலான போட்டோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்நிலையில் பாக்கியலெட்சுமி சீரியலை விட்டு ரித்திகா விலகப்போவதாக சின்னத்திரை வட்டாரங்களில் செய்திகள் பரவி வருகிறது. இதுகுறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் சீரியல் குழுவினரோ, ரித்திகாவோ வெளியிடவில்லை. இருப்பினும் சமீபகாலங்களில் ரித்திகாவின் போர்ஷன் சீரியலில் குறைக்கபட்டுள்ளது. எனவே, அவர் சீரியலில் தொடர்வாரா? என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்துள்ளது.