பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

சின்னத்திரை நடிகை திவ்யா ஸ்ரீதர் 'கேளடி கண்மணி', 'மகராசி', 'கல்யாண பரிசு' ஆகிய தொடர்களில் நடித்திருந்தார். சிறிய இடைவேளைக்கு பின் தற்போது 'செவ்வந்தி' தொடரில் நடித்து வருகிறார். திவ்யா ஸ்ரீதருக்கும் அவரது கணவர் அர்னவுக்கும் இடையேயான பிரச்னை போலீஸ் ஸ்டேஷன் வரை சென்று வந்த நிலையில் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். திவ்யா ஸ்ரீதர் தற்போது கர்ப்பமாக இருந்து வரும் சூழலில் அவருக்காக 'செவ்வந்தி' சீரியல் குழுவினர் மினி வளைகாப்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளனர்.
அதன் வீடியோவை சக நடிகை ஷிவான்யா சோசியல் மீடியாவில் போஸ்ட் செய்துள்ளார். முன்னதாக இதேபோல் 'மகராசி' சீரியல் குழுவினரும் திவ்யாவுக்கு வீட்டில் வைத்தே மினி வளைகாப்பை செய்திருந்தனர். காதலுக்காக பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்த திவ்யாவுக்கு, இன்று கணவரின் ஆதரவும் கிடைக்கவில்லை. எனினும் அவரை சக நடிகர்கள் பாசத்துடன் பார்த்துக்கொள்வதை பார்த்து ரசிகர்களும் நெகிழ்ச்சியடைந்துள்ளனர்.