கூலி பட டீசர் மார்ச் 14ல் வெளியாவதாக தகவல் | அமரன் படத்துக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம் | ஐதராபாத்தில் சூர்யா 45வது படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு | கேங்கர்ஸ் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு | 20 ஆண்டுகளாக சம்பளம் வாங்காமல் நடித்து வரும் அமீர் கான் | தனுஷின் குபேரா, இட்லி கடை படங்களின் நிலவரம் என்ன? | மனைவியிடம் அனுமதி பெற்றுத்தான் நெருக்கமான காட்சிகளில் நடிப்பேன் : ஆதி | டி.வி தொடர்களுக்கு தணிக்கை வாரியம் வேண்டும் : மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு | கொலை செய்பவர்கள் ஹீரோக்களா?: கேரள முதல்வர் கடும் தாக்கு | பிளாஷ்பேக் : அந்த காலத்து அடல்ட் கண்டன்ட் படம் |
‛நாதஸ்வரம்' தொடரின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ஸ்ரீருத்திகா. தொடர்ந்து சீரியல்களில் நடித்து தமிழக மக்களுக்கு மிகவும் பிடித்த நடிகையாக வலம் வருகிறார். கடைசியாக மகராசி தொடரில் நாயகியாக நடித்து வந்த இவர், அந்த தொடரில் நடித்து வந்த ஆர்யன் என்பவரை காதலித்து அண்மையில் திருமணம் செய்து கொண்டார். ஸ்ரீருத்திகா மற்றும் ஆர்யன் என இருவருக்குமே முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்த நிலையில், இருவரும் பரஸ்பர புரிந்துணர்வுடன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பின் ஸ்ரீருத்திகா தான் கர்ப்பமாக இருப்பதாக சில நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்த நிலையில், தற்போது அவருடைய வளைகாப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இதில், சின்னத்திரை பிரபலங்கள் அசார், அஸ்வத், ஸ்ருதிராஜ், நேஹா உட்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளனர். தற்போது அதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாவதை தொடர்ந்து பல ரசிகர்களும் ஸ்ரீருத்திகா - ஆர்யன் தம்பதியினருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.