சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

பிக்பாஸ் வீட்டில் நுழைந்த நாளிலிருந்து தன்னைத்தானே பெரிய ஆள் என்று காட்டிக்கொள்ளும் வகையில் தற்பெருமை பேசி அடிக்கடி பல்பு வாங்குகிறார் அசீம். சக ஹவுஸ்மேட்டுகளில் யாரையாவது பிடித்து சண்டையிடுவது, கத்தி பேசுவது, பெண்களிடம் அதிகாரத்தை காட்டுவது என அதிகாரத்தால் மட்டுமே இன்று வரை சக போட்டியாளர்களை அமைதியாக்கி வென்று வருகிறார். மற்றபடி டாஸ்க்குகளில் பெரிதாக பெர்பாமன்ஸ் செய்வதில்லை.
அசீமை பிக்பாஸ் வீட்டிலும் சரி, வெளியிலும் சரி 'அட்டக்கத்தி','வெறும் வாய் சவுடால்' என்றே பலரும் கிண்டலடித்து வருகின்றனர். அதற்கேற்றார்போல் தன்னை தமிழ் பற்று மிக்கவராக காட்டிக்கொள்ளும் அசீம் அண்மையில் தப்பு தப்பாக தமிழ் எழுதி சிக்கிகொண்டார். தற்போது மீம்கிரியேட்டர்ஸ்கள் அவரை வச்சு செய்து வருகின்றனர். உண்மையான அசீமின் குணமே இப்படித்தானா? அல்லது பொய்யாக விளையாடுகிறாரா? என ரசிகர்களே குழம்பி போய்விட்டனர்.
இந்நிலையில், அசீமின் சக நடிகரான அருண் குமார் ராஜன் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், 'அசீமுடன் 'பூவே உனக்காக' தொடரில் நடித்திருக்கிறேன். அவர் உண்மையான முகமே இதுதான். பெண்களை எப்போதுமே டாமினேட் செய்வார். ஒருமுறை அந்த சீரியலில் நடித்த ஹீரோயினை தகாத வார்த்தையால் திட்டிவிட்டார். அதனால், அந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த அனைவருமே அசீம் மன்னிப்பு கேட்டால் தான் வேலை செய்வோம் என்று சொல்லிவிட்டனர். தயாரிப்பாளர் வற்புறுத்தி கேட்டுகொண்டதால் மட்டுமே அசீம் அன்று மன்னிப்பு கேட்டார். சீரியலில் வரும் வசனத்தில் கூட ஒரு பெண் தன்னை 'டா' போட்டு கூப்பிடக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பார்' என்று அதில் கூறியுள்ளார்.




