பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
தீபாவளியை முன்னிட்டு கலர்ஸ் தமிழ் சேனல் சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்புகிறது. அதில் முக்கியமான சில நிகழ்ச்சிகள் வருமாறு:
நாளை காலை 11 மணிக்கு பீம்லா நாயக் படம் ஒளிபரப்பாகிறது. பவன் கல்யாண், ராணா டகுபதி நடித்துள்ள படம் இது. ஐயப்பனும் கோஷியும் என்ற மலையாளப் படத்தின் தெலுங்கு ரீமேக் இது. தற்போது தமிழில் ஒளிபரப்பாகிறது. ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரியான துணை ஆய்வாளர் பீம்லா நாயக் (பவன் கல்யாண்) மற்றும் ராணுவத்தில் ஹவில்தாராக முன்பு பணியாற்றிய டேனியல் சேகர் (ராணா டகுபதி) ஆகியோருக்கு இடையிலான மோதலையும், எதிர்ப்பு உணர்வையும் சுற்றி பிண்ணப்பட்ட கதை.
24ம் தேதி காலை தீபாவளி தினத்தன்று 9 மணிக்கு பேரானந்தம் தருவது காதலா, திருமணமா? என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் ஒளிபரப்பாகிறது. 10 மணிக்கு நம்ம வீட்டு தீபாவளி நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. வள்ளி திருமணம், மந்திரப் புன்னகை, ஜமீலா, உள்ளத்தை அள்ளித்தா, சில்லுனு ஒரு காதல், கண்ட நாள் முதல் மற்றும் பச்சகிளி ஆகியவற்றின் நடிகர் நடிகையர் பங்கேற்கும் நிகழ்ச்சி இது.
மதியம் 12.00 மணிக்கு இந்த சிறப்பு சமையல் நிகழ்ச்சியான கலக்கல் ஸ்பெஷல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இந்திய, இத்தாலிய மற்றும் காண்டினெண்டல் சமையல் முறையிலான பல்வேறு உணவுகளை தயாரிப்பது பற்றி இது சுவைபட விளக்கவிருக்கிறது. மாலை 4 மணிக்கு அருள்நிதி, மதுபாலா, ஸ்மிருதி வெங்கட் நடித்த தேஜாவு படம் ஒளிபரப்பாகிறது. ஒரு எழுத்தாளர் எழுதும் கதையில் வரும் சம்பவங்கள் நிஜத்தில் நடப்பது மாதிரியா 'ரைம் திரில்லர் கதை.
மாலை 6 மணிக்கு விஜய் ஆண்டனி நடித்த கோடியில் ஒருவன் படம் ஒளிபரப்பாகிறது. ஆத்மிகா ஹீராயின். ஐஏஎஸ் படிக்கும் கனவுடன் சென்னை வரும் ஒருவன் தமிழக முதல்வராகும் கதை. ஆனந்த கிருஷ்ணன் இயக்கி இருந்தார்.