'கேம் சேஞ்ஜர்' அனுபவம் ஒரு 'பயங்கரம்' - விலகிய எடிட்டர் பேச்சு | பிளாஷ்பேக்: மலைக்க வைக்கும் 50வது ஆண்டில் “மயங்குகிறாள் ஒரு மாது” | ஜூன் மாதத்தில் ‛சர்தார் 2' படப்பிடிப்பு முடியும் ; மாளவிகா மோகனன் | காதலிக்க நேரமில்லை, தில், ராட்சசன் - ஞாயிறு திரைப்படங்கள் | நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் |
தமிழ் சினிமாவில் 'சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி' என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை வெண்பா. தொடர்ந்து 'கற்றது தமிழ்' படத்திலும் குட்டி ஆனந்தியாக நடித்து பாராட்டுகளை பெற்றார். குழந்தை நட்சத்திரமாக மட்டுமே 10 படங்கள் வரை நடித்துள்ள வெண்பா, டீனேஜ் வயதில் 'காதல் கசக்குதய்யா' என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அந்த படம் சரியாக ஓடவில்லை என்றாலும் கொள்ளை கொள்ளும் பேரழகால் தமிழ் இளைஞர்களின் கனவு கன்னியாக மாறினார். தொடர்ந்து 'பள்ளிப் பருவத்திலே', 'மாயநதி', 'ஆயிரம் ஜென்மங்கள்' ஆகிய திரைப்படங்களில் தொடர்ந்து நடித்திருந்தாலும் அவருக்கு ஹீரோயின் மார்க்கெட்டில் பெரிய அளவில் வரவேற்பில்லை.
இந்நிலையில், வெண்பா தற்போது சின்னத்திரையின் பக்கம் கவனம் செலுத்தி வருவதாக தெரிகிறது. அவர் தற்போது, ஜீ தமிழில் புதிதாக ஒளிபரப்பாக உள்ள 'சந்தியாராகம்' என்கிற தொடரில் ஹீரோயினாக நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சின்னத்திரை நடிகைகள் சினிமா நடிகைகளை விட பெயர், புகழ் பெற்று பிரபலங்களாக வலம் வரும் நிலையில், வெண்பாவின் இந்த சீரியல் என்ட்ரி திரைத்துறையில் அவருக்கு இரண்டாவது இன்னிங்சாக அமையுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.