'3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி |
தொலைக்காட்சி பிரபலங்களில் மிகவும் தைரியமான பெண்ணாக வீஜே பார்வதி அறியப்படுகிறார். யூ-டியூப்களில் அடல்ட் கண்டண்ட் பேசியே டிரெண்டிங்க் ஆனவர் என்பதால், சோஷியல் மீடியாவில் இவர் வெளியிடும் பதிவுகளுக்கு அடிக்கடி மிகவும் ஆபாசமான கமெண்டுகளே வரும். ஆனால், அதையெல்லாம் மிகவும் தைரியமாகவும் கூலாகவும் கையாண்டு வருகிறார். ஜீ தமிழில் சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தொலைக்காட்சி நடிகையாகவும் அறிமுகமான பார்வதிக்கு தற்போது மெல்ல மெல்ல சினிமா வாய்ப்புகள் தேடி வருகிறது. இந்நிலையில், அவர் மேஹாலயா, சிரபுஞ்சி என ஜாலியாக ஊர் சுற்றி வருகிறார்.
அங்கு தனது குழுவுடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ள அவர், “நான் எப்போதுமே ஒரு பயணி. பயணம் வாழ்வின் மிகச்சிறந்த தருணங்களை உருவாக்குவதற்கான ஒரு வழி. பயணம் செய்யுங்கள். காசு போனால் மீண்டும் கிடைக்கும், நேரம் திரும்ப கிடைக்காது. நான் எனது இருபதுகளை அதிகமாக பயணம் செய்வதிலும், புதிய மனிதர்களை சந்திப்பதிலும் செலவிட ஆசைப்படுகிறேன்' என கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களுக்கு தற்போது லைக்ஸ் குவிந்து வருகிறது.